அடுத்தவர்கள் நமக்கு உதவ முன்வருவார்கள்
நாம் ஒருவருக்கு துரோகம்,பாவம்,எதுசெய்தாலும், அது நம்மையே ஒருகாலத்தில்
வந்துசேரும்.யார் மூலமாக தெரியுமா.நீங்கள் யாருக்கு செய்தீர்களோ, அவர்மூலம்தான் வரும்.
எப்படி., ஒருவரும் அதாவதுஇருவரும் இறந்து வேறு ஜன்மா எடுத்தவுடன், எப்படி தொடர்பு
வரும் என்றால்.,
ஒரு பசுமாட்டுக்கூட்டதிலோ, அல்லது ஆட்டுக்கூட்டதிலோ., சென்றுகொண்டு இருக்கும்போது,
எப்படி, அந்தகன்று, சிறிய ஆடு இவைகள், சரியாக தனது தாயினை கண்டுபிடித்து
செல்கிறதோ,அதுபோல, நல்லதும் கேட்டதும், கெட்டதும், அவரவர்கள் யாருக்கு செய்தார்களோ, அவர்கள் மூலமாக சரியாக வரும்.
அதனால்தான்., இந்த உலகிலே, சிலபேர் சிலருக்கு உதவிசெய்கிறார்கள். ஆனால், எனக்குமட்டும் உதவி யாரும் செய்வதில்லையே என்று உங்களுக்கு தோன்றலாம்.எதனால்என்றால், நீங்கள் யாரிடமும் கடன்படவில்லை என்று புரிந்துகொள்ளுங்கள். கடன்பட்டிருந்தால்தான்., அடுத்தவர்கள் நமக்கு உதவமுன்வருவார்கள்.










