செல்வ செழிப்பு ஏற்படவும், செல்வம் விருத்தியாகவும் வலம்புரி சங்கை வீடு, கடைகள், தொழில் நிறுவனங்களில் வைத்து தினமும் பூஜித்து வாருங்கள். உயர்ந்த பலன்களை அடையலாம்.
வலம்புரி சங்கை வீடுகளில் வைத்து பூஜிக்கும் போது செல்வ வளம் கொழிக்கிறது. கடை மற்றும் தொழில் நிறுவனங்களில் வைத்து பூஜித்து வந்தால் கண் திருஷ்டி உட்பட பல தோஷங்கள் நீங்குகின்றன.
வலம்புரி சங்கால் கண்திருஷ்டி, எதிரிகளின் தீய செயல்கள், வாஸ்து தோஷம் இவை எதுவும் ஏற்படாது. செல்வ வளம் உயரும். தொழில் மேன்மை அடையும். மகாலட்சுமியின் அருள் பார்வை நிலைத்து நிற்கும். வீடுகளில் வைத்து சரியான முறையில் பூஜித்து வரும் போது குழந்தைகளின் கல்வி சிறக்கும். சிறப்பானதொரு மாற்றம் ஏற்படும்.
வலம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில் உள்ளவர்கள் உயர்வான நிலையை அடைகின்றனர். பதவி உயர்வு, சம்பள உயர்வு. பாராட்டுகள், புகழ் வந்து சேரும். உங்கள் எதிரி உங்களை கண்டு அஞ்சுவார்கள். எந்தவிதமான தீய சக்தியும் உங்களை அணுகாது ஓடி விடும்.
நீடித்த செல்வம் கிடைக்கும்.










