பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார்.
பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது.இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது.
பைரவரை
சொர்ணாகர்ஷண பைரவர்,
யோக பைரவர்,
ஆதி பைரவர்,
கால பைரவர்,
உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.
பைரவர் வையிரவன்,கஞ்சுகன்,
நிர்வாணி வகை.சிவனின் ஒரு மூர்த்தம்.ஆயுதம் திரிசூலம்.இவரது துணை பைரவி.
பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் “வக்ர மூர்த்தி” என்று அறியப்பெறுகிறார்.
பைரவர் தோற்றம்
பிரித்தானிய சுவடிக்கூத்தில் இருக்கும் பைரவர் சிலை.
அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான்.தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான்.
அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால்,உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும்,முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார்.
எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
பைரவ மூர்த்தியை
மூர்த்தி,
பிரம்மசிரேச்சிதர்,
உக்ர பைரவர்,
க்ஷேத்ரபாலகர்,
வடுகர்,
ஆபத்துதாரனர்,
சட்டைநாதர்,
கஞ்சுகன்,
கரிமுக்தன்,
நிர்வாணி,
சித்தன்,
கபாலி,
வாதுகன்,
வயிரவன் என்று பல பெயர்களில் வணங்குகிறார்கள்.
அட்சர பீடங்களின் காவலன்
சிவபெருமானை பிரிந்த ஆதி சக்தி பிரம்மாவின் மானசீக குமாரனான பிரஜாபதி தட்சன் மகளாக பிறந்தார். அவர் தாட்சாயினி என்றும் சதி தேவி என்றும் அறியப்பட்டார்.பருவ வயதில் சிவபெருமானின் மீது காதல் கொண்டு, தட்சனின் விருப்பமின்றி திருமணம் செய்து கொள்கிறார்.ஆணவம் கொண்டிருந்த பிரம்ம தேவரின் தலையை கொய்து பூசையின்றி போக சாபம் அளித்தமையினால் சிவபெருமான் மீது பிரம்ம குமாரனான தட்சன் கோபம் கொண்டிருந்தார்.
அதனால் சிவபெருமான் தாட்சாயினிக்கு அழைப்பு அனுப்பாமல் யாகமொன்றை தொடங்குகிறார்.அந்த யாகத்தீயில் சதிதேவி விழுந்து இறக்கிறார்.
சிவபெருமான் சதிதேவியாரின் பூத உடலோடு அலைவதைக் கண்ட திருமால்,சிவபெருமானை அந்த மாயையிலிருந்து அகற்றுவதற்காக சக்ராயுதத்தினால் திருமால் அவ்வுடலை தகர்த்தார்.சதி தேவியாரின் உடல்கள் பல்வேறு பாகங்களாக பூமியில் சிதறுண்டது.
அவ்வாறு சிதருண்ட சதிதேவியின் உடல் பாகங்களை சிவபெருமான் சக்தி பீடமாக மாற்றினார்.தாராகாசுரன் போன்ற அரக்கர்களிடமிருந்து சக்தி பீடங்களையும்,அங்குவரும் பக்தர்களைக் காக்கவும் ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் ஒரு பைரவரை காவல் தெய்வமாக நியமனம் செய்தார்.
பைரவ வடிவங்கள்
மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும்,அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது.
மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.
சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.
இனி பைரவர்களை தரிசிப்போமாக..!










