அத்தி மரத்தில் காட்சி கொடுத்த வானமுட்டிப் பெருமாள்.
40 வருடங்களுக்கு ஒருமுறை தரிசனம் கிடைக்கும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆதி அத்திகிரி வரதரை பற்றி எல்லோரும் அறிந்ததே.
ஆனால் 14 அடி உயரத்தில் அத்திமரமாகவே காக்ஷி தரும் பெருமாளை எத்தனை பேருக்கு தெரியும். மரத்தின் வேர்களே பெருமாளின் திருப்பாதங்கள்.
பெருமாள் திருநாமம்: வானமுட்டிப் பெருமாள்.
இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் உள்ள மூவலூரிலிருந்து 2 கிமீ புறவழிச்சாலையில் 5 கிமீ தொலைவில் உள்ள கோழிக்குத்தியில் அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.
சோழன்பேட்டை கிராமத்தில் அமைந்த கோடிஹித்தி பாப விமோசனபுரமே கோழிக்குத்தி என்று தற்போது அழைக்கப்படுகிறது.
14 அடி உயரத்தில் அத்தி மரத்தில் வடிக்கப்பட்டு மூலிகை நிறம் தீட்டப்பட்டு கிழக்கு நோக்கிய நிலையில் இறைவன் உள்ளார். பக்தப்ரியன் என்ற பெயரில் இப்பெருமாள் தயாலக்ஷ்மி, பூமிதேவியோடு உள்ளார்.
இக்கோயிலில் வரதராஜப் பெருமாள், யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார், நர்த்தன கிருஷ்ணர், கருடாழ்வார், சப்தசொரூப ஆஞ்சநேயர், விஷ்வக்சேனர், ராமானுஜர், பிப்பல மகரிஷி ஆகியோருக்கான சன்னதிகள் காணப்படுகின்றன.
அத்தி மரத்தில் காட்சி கொடுத்த வானமுட்டிப் பெருமாள்.
அத்தி மரச்சிலைகள்:
1.பாப்பாக்கோயில்
2.கஸ்தூரிரெங்கப் பெருமாள் கோயில்
3.ஆபராணி அனந்த நாராயணப் பெருமாள் கோயில்










