அஷ்ட லக்ஷ்மிகளின் வைபவங்களை அறிந்து பெரிய பிராட்டியின் அனுக்ரஹத்தை பெறலாம்
வாருங்கள்,
முதல் லக்ஷ்மியின் திருநாமம் ((அநபாயினி)) இவள் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின்
திருமார்பில் சர்வ அலங்கார பூஷிதையாகவும்,எம்பெருமானின் வலது திருமார்பின் மேல்
முக்கோண மண்டலத்தின் நடுவில் செந்தாமரைப் புஷ்பத்தில் நன்றாக அமர்ந்து இரண்டு
கைகளிலும் தாமரை மலர்களை ஏந்திய வண்ணம் அபய வரத ஹஸ்தங்களுடன் மலர்ந்த
தாமரையின் மலர்ச்சியை ஒத்ததான புன்சிரிப்பை நிதானமாக வெளிப்படுத்தியபடி தன்னை
வணங்குபவர்களை அனுக்ரஹத்தபடி இருக்கிறாள்,
இரண்டாவது லக்ஷ்மி (யோக லக்ஷ்மி) இவள் எம்பெருமானுக்குச் சமமாக இருந்து கொண்டு தன்னை வணங்குபவர்களுக்கு சகல ஐச்வர்யத்தையும் அளித்துக் கொண்டு இருப்பவள்,
மூன்றாவது லக்ஷ்மி (போக லக்ஷ்மி)இவள் ஸ்ரீதேவி பூதேவி த்ருவ பேரத்தின் அருகில் இருந்து அனைவருக்கும் அருள்பவளாவாள்,
நான்காம் லக்ஷ்மி( நீளா தேவி) இவள் ஸ்ரீவைகுண்டாதிபதியான எம்பெருமானின் நிழல் போன்று இருப்பவள், தன்னுடைய இரண்டு கைகளிலும் இரு பத்ம மலர்களை வைத்த வண்ணம் வரத அபய ஹஸ்தத்துடன் கூடி பக்தர்களுக்கு அருள்பவள்
ஐந்தாம் லக்ஷ்மி (வீர லக்ஷ்மி) இவள் அனைத்து இடங்களிலும் வெற்றி உண்டாகும்படியாக பெருமாளின் சன்னதிக்கு வலது பக்கத்தில் வாசம் செய்து பக்தர்களைக் காத்தருள்பவள்,
ஆறாம் லக்ஷ்மி (கோதா லக்ஷ்மி) இவள் எம்பெருமானின் திவ்ய மஹிஷியான பூமிப்பிராட்டியின் திரு அவதாரமாக செங்கழுநீர் மலரேந்தி எம்பெருமானின் இடது புறத்தில் சந்நதி கொண்டு பக்தர்களை அனுக்ரஹிப்பவள் இவளே ஆண்டாள்,
ஏழாம் லக்ஷ்மி (பாக லக்ஷ்மி), இவள் எம்பெருமானுக்கு சகல அன்னங்கள் மற்றும் பக்ஷ்யங்கள் மற்றும் தளிகைகளை செய்யும் இடமான திருமடப்பள்ளியறையில் வாசம் செய்து எம்பெருமானின் பசியை ஆற்றி அதனால் அவனை பக்தர்களை காத்தருளச் செய்வித்து தனது பக்தர்களை அனுக்ரஹப்பவள்,
எட்டாம் லக்ஷ்மி( கஜ லக்ஷ்மி) தனது இரண்டு புறங்களிலும் இரண்டு யானைகள் திருமஞ்சனம் செய்விக்க நடுவில் தாமரை மலரில் அமர்ந்து கொண்டு தனது பக்தர்கள் அனைவரையும் காத்தருள்பவள், இவளே ஸ்ரீமஹா லக்ஷ்மி,
இப்படி அக்ஷ்ட லக்ஷ்மிகளின் ப்ரபாவத்தை அறிந்து அவளிடம் பக்திசெய்பவர்கள் அஷ்ட ஐச்வர்யத்தையும் அடைந்து அச்யுத ராகவனின் அருட் கடாக்ஷத்தையும் பெற்றுய்யலாம்,











