மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை, குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு வழிபடுவது
‘இஷ்ட லிங்கம்’ எனப்படும்.
யார், யார் எந்த லிங்கங்களை வழிபட்டனர் என்று பார்க்கலாம்.
இந்திரன் – மரகத லிங்கம்
குபேரன் – சொர்ண லிங்கம்
எமன் – கோமேதக லிங்கம்
வருணன் – நீல லிங்கம்
விஷ்ணு – இந்திர நீல லிங்கம்
பிரம்மன் – சொர்ண லிங்கம் அஷ்ட வசுக்கள்
வசுதேவர்கள் – வெள்ளி லிங்கம்
வாயு – பித்தளை லிங்கம்
அசுவினி தேவர்கள் – மண் லிங்கம்
மகாலட்சுமி – ஸ்படிக லிங்கம்
சோம ராஜன் – முத்து லிங்கம்
சாதுர்யர்கள் – வஜ்ஜிர லிங்கம்
வேதிகர்கள் – மண் லிங்கம்
மயன் – சந்தன லிங்கம்
நாகர்கள் – பவள லிங்கம்
அரசுர்கள் – பசுஞ்சாண லிங்கம்
பார்வதி – வெண்ணெய் லிங்கம்
நிருதி – தேவதாரு மர லிங்கம்
யோகிகள் – விபூதி லிங்கம்
சாயா தேவி – மாவு லிங்கம்
சரஸ்வதி – ரத்தின லிங்கம்
யட்சர்கள் – தயிர் லிங்கம்
ஓம் நமச்சிவாய
எல்லாம் வல்ல எம்பெருமான் சர்வ ஈசனை வேண்டி மனதார பிரார்த்தனை செய்வோம்..!
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
என்றும் இறைபணியில்.











