உருவம் கண்டு எடை போடாதே
ஒரு தையற்காரர் தனது கடையில் தைத்துக் கொண்டிருக்கிறார். அவரது மகன் அவர் வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருந்தான்.
தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார் அதை ஒரு அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்திரிக் கோலைக் அவர் அமரும் இடம் அருகே வைத்துவிட்டார் பிறகு ஊசியால் துணியை தைக்க தொடங்கினார்.
துணியை தைத்து முடிந்ததும் அந்த சிறிய ஊசியை எடுத்து தனது தலையிலிருந்த தொப்பியில் குத்தி பத்திரப் படுத்தினார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த அவரது மகன் அவரிடம் கேட்டான், கத்திரிக்கோல் விலை உயர்ந்தது அதை உங்கள் காலடியில் போடுகிறீர்கள் , ஊசி சிறியது மற்றும் மிகவும் மலிவானது அதை உங்கள் தலை தொப்பியில் பாதுகாக்கிறீர்களே அது ஏன் என்று கேட்டான்.
அதற்கு தந்தை நீ சொல்வது உணமைதான் கத்திரக்கோல் அழகாகவும், மதிப்பு உள்ளதாகவும் இருந்தாலும் அதன் செயல் வெட்டுவது அதாவது பிரிப்பது ஆனால் ஊசி சிறியதாகவும் மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது என்றார்.
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர் அதனால் ஒருவரது உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது.
வாழ்கவளமுடன்.










