• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

எம் மன்னரே ! உம் திருவடிக்கு இந்த பிள்ளையின் அன்பு முத்தங்கள்!

siddharbhoomi by siddharbhoomi
February 7, 2020
in ஆன்மிகம்
0
எம் மன்னரே ! உம் திருவடிக்கு இந்த பிள்ளையின் அன்பு முத்தங்கள்!
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

எம் மன்னரே !
உம் திருவடிக்கு இந்த பிள்ளையின் அன்பு முத்தங்கள்!

நேற்று !
இங்கே தான்,
நான் !
அழிந்து போன தருணம்? இது !

பொன்னி நதி பாய்ந்து வளம் கொழித்த தஞ்சை மண்ணில் ஆயிரமாயிரம் மன்னர்கள் ஆண்டிருப்பார்கள் !ஆண்டிருக்கிறார்கள் !
ஆனால்,
இந்த ஒற்றை மனிதனின் பேர் மட்டுமே,
இன்றும்,
நிலைத்திருக்கிறது !

இதுவென்ன மாயம்?
இங்கே முகநூலில்,
நூற்றுக்கணக்கிலே சோழ ஆர்வலர்கள் குவிந்திருக்கிறார்களே ?
அதனாலா ?
இல்லை,,இல்லையில்லை,

எந்த இடத்திலும்,,
தன்னை,,
தன்னை மட்டுமே ? முன்னிறுத்தாமல்,,,,
எல்லாம்,,எல்லாம்,,
பெருவுடையார் கருணை !
,”நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க…

என்று வரி வரியாக,,,,கல்லிலே வெட்டுகையில்,,,,,

’’வேண்டாம்,,,சிற்பியே,,,
இங்கே அனைத்தும்,,
நான்,,,தான்,,,,
நானே தான்,,,
என் ஆட்சி,,,
எனது ஆட்சி,,,!
ஆதலின்,,இங்கே..என் பெயரினைத்தவிர,,,வேறு எவர் பெயரும் வேண்டாம்,,,, என்று அந்த மாமன்னன் சொல்லியிருக்க முடியும்,,,?

ஆனால்,,,,
அந்த மனிதன் சொல்லவில்லை,,,!

பொன் கொடுத்தவன் பெயர் மட்டும் வெட்டினால் போதும்,,,
கல் கொத்திக் களைத்திருக்கும்,,,கல்தச்சருக்கு மோர் கொடுத்தவன் பெயர்,,,தரை மெழுகியவன் பெயர்,,,,, நடனமாடியவர் பெயரெல்லாம் வேண்டாமென மறுத்திருக்கவும் முடியும்,,, ?

ஆனால்,,,,
அப்படியேதும் செய்யவில்லை,,,,!

இதோ,,
இந்தப் பெருங்கோவிலைப் போலவே,,
நமக்கொரு,,
கல் மாளிகை கட்டுக,,! என்று சொல்லி இருந்தால்,,,,
பெருந்தச்சன் மறுத்திருக்கப் போகிறாரா ?
இலத்தி சடையன் முடியாதென்றிடப் போகிறாரா ?
கட்டி இருக்க முடியும்,,,,,
ஆனால்,,கட்டவில்லை,,,

நாமெல்லாம்,,,
என்றாவதொரு நாள்,,,
அழிந்து போவோம் !
மண்ணோடு மண்ணாகிப் போவோம்,,,,

ஆனால்,,,
பெருவுடையாருக்குக் கட்டப்பட்டக் கோவில்,,,!
ஒரு நாகரீகத்தை,,
ஒரு வாழ்வியலை,,

ஒரு சமூகத்தின் செழிப்பினை,,,
பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தும்,,,
நினைக்க வேண்டும் !
சொல்ல வேண்டும்,
பேச வேண்டும்,,,,
அந்த வாழ்விற்கு குறையாத வாழ்வினை,,நம் மக்கள் வாழ வேண்டுமென நினைத்த அந்த மனிதனின் பெருங்கனவு !

அது மட்டுமா ?
அத்தனை பெரிய கோவிலைக் கட்டி விட்டு,,,
ராஜராஜேச்வரம் என்று பெயரினை மட்டும் வெட்டி விட்டு,,,,
பெருவுடையாருக்குப் பக்கத்திலே,,,
குறைந்த பட்சம்,,
தன் ஆளுயரச் சிலையாவது நிறுவி இருக்கலாமே ?

அதுவும்,,செய்யாமல்,,,,
கூப்பிய கரத்துடன்,,,
எவருக்கும் தெரியாமல்,,கோபுரத்தின் உச்சியில்,,ஒற்றை சிலையொன்று,,போதுமென நினைத்த பக்குவம்,,,!

தன்னை நேசித்த அதிகாரி செய்தளித்த செப்பு படிமம் ஒன்று போதுமென நினைத்த பெருந்தன்மை,,

இவையெல்லாவற்றிற்கும்,,மேலாக,,
எல்லோர்க்கும்,,நன்றாம் பணிதல் என்று குறள் சொல்லிய நெறி அறிந்த மாமன்னரின் பெருங்கோவிலில்,,,,
இத்தனையும்,,
நினைத்தபடி,,,,
நின்றிருந்த போதுதான்,, தோன்றிற்று,,,,!

பட்டு வேட்டி,,சட்டை,,,கேமரா,,,மொபைல்,,,பாட்டரிகள்,,
பாட்டரி சார்ஜர்,,,பிஸ்கெட்,,பழங்கள்,,,குளிர்பானங்கள்,,,
என அத்தனையும்,,நிறைத்த தோள் பையுடன் வந்தவன்,,,,
இவையேதுமின்றி,,,,
மேல் சட்டையினையும்,,கழற்றிவிட்டு,,
இடுப்புத் துணியுடன்,,,
நின்றிருந்த பொழுது,,,,!

ஒற்றைத் துளி,,,!
கோபுரக் கலச நீர் நம்மீது படாதா ? என பரிதவித்துப் பலர் ஒட,,,,
விழும்,,நம் மீதும்,,விழும்,,,
அவன் நினைத்தால்,,,
நம் மீதும்,,விழும்,,, என்றிருந்த போது,,,,

நேற்று,,,!
நான்,,மறைந்து போனேன்,,,,!
ஆம்,,,!
இப்பொழுதும்,,,
இனி,,
எப்பொழுதும்,,,?
இந்த அமைதியைச் சற்று நேரம்,,,
எனக்களித்த எம் மன்னரே !
உம் திருவடிக்கு இந்த பிள்ளையின் அன்பு முத்தங்கள்!

Previous Post

பாம்புகள் மட்டும்தான்..!

Next Post

மகா சதாசிவ மூர்த்தி

Next Post
மகா சதாசிவ மூர்த்தி

மகா சதாசிவ மூர்த்தி

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »