இவ்வுலகில் மொத்த ஆளுமையும் சிவபெருமானின் ஆளுமைக்கு உட்பட்டதேயாகும்.
இவ்வுலகம் பஞ்சபூதங்களும், பஞ்சபட்சிகளும், 9 நவகிரங்களும், 18 சித்தர்கள், 48 ஆயிரம் ரிஷிகள், 8 திக்குபாலர்கள், வாஸ்துபுரவின், வினாயகர் முதல் கொண்டு முப்பெரும் தேவர்கள், முப்பெரும் தேவியர்கள், முப்பத்து முக்கோடி தேவர்களும் இயற்கையும், பிரபஞ்ச சக்தியும் இவ்வுலகையும், நம்மையும் ஆளுகின்றன.
இவ்வுலகில் மொத்த ஆளுமையும் சிவபெருமானின் ஆளுமைக்கு உட்பட்டதேயாகும். இதைதான் எல்லாம் சிவமயம் என்று சொல்வார்கள். 18 சித்தர்களுக்கும் குரு ஆனவர் சிவபெருமான் ஆவார்.
சித்தர்கள் கண்ட மருத்துவம் தான் சித்த மருத்துவம். இந்த மருத்துவம் இயற்கையில் உருவான செடி, கொடி, மரம் இவைகளில் இருந்து, இலை, பட்டை, வேர் முதலியவைகளை கொண்டு மூலிகை கசாயம், சூரணம் செய்யப்படுகின்றன. சித்தர்களிடம் இருந்து நம் முன்னோர்களும், நம் மன்னோர்களிடம் இருந்து இன்று நாம் செய்யும் மருத்துவம்தான் சித்த மருத்துவம் ஆகும்.










