ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சகஸ்ரலிங்க வழிபாட்டு நாட்கள்!!!
ஒரே ஒரு சிவலிங்கத்தின் முன்பாக சிவாய நம என்றோ அல்லது ஓம் நமச்சிவாய என்றோ ஜபித்தால் ஒருமுறை ஜபித்த பலன் தான் கிட்டும்;
கருங்கல்லால் கட்டப்பட்ட பழமையான சிவாலயத்தினுள் சாதாரண நாளில் ஒருமுறை சிவாயநம/சிவாயசிவ/சிவசிவ//நமசிவாயநம என்று ஜபித்தால் 1000 முறை ஜபித்த பலன் கிட்டும்;
அமாவாசை அல்லது பிரதோஷம் அல்லது திருவாதிரை அல்லது கிரகண நாளில் கிரகண நேரத்தில் ஜபித்தால் எத்தனை முறை ஜபிக்கின்றோமோ அத்தனை முறை பெருக்கல் 100 கோடி மடங்கு ஜபித்த பலன் கிட்டும்;
அதுவே,ஒரே ஒரு சகஸ்ரலிங்கத்தின் முன்பாக ஒரே ஒருமுறை சிவாய நம என்று ஜபித்தால் 1000 முறை ஜபித்த பலன் கிட்டும்;
அந்த சகஸ்ரலிங்கத்திற்கு ஒருமுறை பால் அபிஷேகம் அல்லது ருத்ராட்ச அபிஷேகம் அல்லது விபூதி அபிஷேகம் அல்லது கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால் 1008 சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்த புண்ணியம் கிட்டும்;
தமிழ்நாட்டிலும் மற்றும் பாரத தேசம் முழுவதும் பல ஊர்களில் பழமையான சிவாலயங்களில் சகஸ்ரலிங்கங்கள் இருக்கின்றன;
இந்த ஆலயங்களின் பட்டியல் மிகப் பெரியது;தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு சகஸ்ரலிங்கம் சராசரியாக இருக்கின்றது;
ஜோதிடப்படி,மேஷராசியில் முதல் நட்சத்திரமான அசுபதியை செவ்வாய் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை கடக்கும்;அப்போது வரும் செவ்வாய்க்கிழமை அன்று குருஓரையில் சகஸ்ரலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யத் துவங்கி அதற்கு அடுத்த ஓரையான செவ்வாய் ஓரை முடியும் போது அபிஷேகத்தை நிறைவு செய்ய வேண்டும்;
அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் சிவன் 108 போற்றி அல்லது 1008 போற்றி அல்லது ஒருமணி நேரம் ஏதாவது ஒரு சிவ மந்திரம் ஜபிக்கலாம்;
சகஸ்ரலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் முறை:
சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போலவே அபிஷேகம் செய்ய வேண்டும்; பசுவின் பாலைக் கறந்து அதன் சூடு ஆறும் முன்பாக அபிஷேகம் செய்வதால் விஷேசமான பலன் கிட்டும்;நிறைவாக 108 ஐந்து முகருத்ராட்சங்களால் அல்லது 1008 ஐந்து முக ருத்ராட்சங்களால் அபிஷேகம் செய்யலாம்;
சகஸ்ரலிங்கம் இருக்கும் மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொரு தூணிற்கும் செவ்வரளி மாலையும்,சகஸ்ரலிங்கத்திற்கு ஒரு செவ்வரளி மாலையும் அணிவிக்க வேண்டும்;
செவ்வரளி மாலையால் சகஸ்ர அர்ச்சனை செய்யவேண்டும்;படையலாக தக்காளிச்சாதம் இட வேண்டும்;
அபிஷேகம்,ஆராதனை நிறைவானப் பின்னர்,படையலை அங்கே குழுமியிருக்கும் அனைவருக்கும் பகிர்ந்து தரவேண்டும்; இந்த அபிஷேகம் செய்பவர்களும் சாப்பிடலாம்;
பல ஆலயங்களில் 1970 வரையிலும் சகஸ்ரலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்கு என்றே பசுக்களும்,மிகச் சில இடங்களில் காரம்பசுக்களும் வளர்த்துள்ளார்கள்;மீண்டும் இதை செயல்படுத்துவது நன்று;
சகஸ்ரலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் போது நமக்கு உபதேசிக்கப்பட்ட சிவமந்திரங்களை ஜபிக்கலாம்;அது 1000 மடங்காகப் பெருகி நமக்கு வழிகாட்டும்;
அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் சகஸ்ரலிங்கத்திற்கு அர்ச்சனை செய்வதற்காக 12 நாகலிங்கப் பூக்களை தானமாகத் தரலாம்;
சகஸ்ரலிங்கத்திற்கு இவ்வாறு அபிஷேகம் செய்ய ஏற்ற நாட்கள்:
15.1.2019 செவ்வாய் காலை 9.38 வரை
5.2.2019 செவ்வாய்
12.2.2019 செவ்வாய்
19.2.2019 செவ்வாய்(மாசி பவுர்ணமி)
சகஸ்ரலிங்கத்திற்கு இவ்வாறு அபிஷேகம் செய்வதால் உண்டாகும் பலன்கள்:
1.தீராத நோய்கள் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்;
2.ரத்த சோகை,தோல் நோய்கள் எளிதில் குணமாகும்;
3.கண் நோய்,கண்களில் வரும் கான்சர்,கண் பார்வை மங்குதல்,கண் கட்டிகள்,கண் பார்வைக் குறைவு போன்றவைகள் குணமாகும்;
4.எப்போதும் வறுமைக்கோட்டிற்கு கீழேயே வாழ்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தைக் காண்பார்கள்;
5.இன்றைய நவீன கருவிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருப்பவர்கள் இதைச் செயல்படுத்தினால்,அவர்களது கண்டுபிடிப்புகள் மகத்தான வெற்றிகளை அடையும்;
(முற்பிறவிகளில் இதைச் செய்தவர்கள் தான் இன்றைய காலத்து விஞ்ஞானிகளாகவும்,கண்டுபிடிப்பாளர்களாகவும் ஆகியிருக்கின்றார்கள்;
சார்லஸ் பாபேஜ்,மார்கோனி,தாமஸ் ஆல்வா எடிசன் போன்றவர்கள் முற்பிறவிகளில் இம்மாதிரியான சகஸ்ரலிங்க அபிஷேகங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட பிறவிகள் முழுவதும் மனதாரச் செய்தவர்களே!)











