திருவெண்காடு திருக்கோயில் தரிசனம் புதன் தலம் பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேச்வரர் சூரியன் சந்திரன். ஐராவதம்.இந்திரன்.சிவபிரியர். வேதாரசி.சுவேதகேது. சுவேதன். சத்தியநல்வரதன்.இவரகள் வழிபட்டு அருள்பெற்றனர்.
திருஞானசம்பந்தர் திருவெண்காடு வட எல்லையில் வந்தபோது ஊரெல்லாம் சிவலோகமாகவும். மணலெல்லாம் சிவலிங்கமாகவும்.தோன்றின ஆதலால் இத்தலத்தை மிதித்தற்கு அஞ்சி அம்மையே என அழைத்தார்
பெரிய நாயகி அம்மை அங்கு தோன்றி திருஞானசம்பநதரை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டாளாம் இச்சிலை அம்பாள் பிரகாரத்தில் உள்ளது கூப்பிட்டான் குளம் என்று அழைக்கப்படுகிறது அந்த இடம் இக்குளத்தில் உள்ள விநாயகர் ஞானசம்பந்த விநாமகர் இத்தலத்து இறைவனை திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்கள்.
திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்கள்.சுந்தரர். ஒரு திருப்திகமும்.. யாணிக்க வாசகர் கீர்த்தி திருஅகவலில் விருந்தினனாகி வெண்காடதனில் குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும் திருக்கோவையாரில் வேலன் புகுந்து வெறியாடுக எனத்தொடங்கும்பாடலிலும்
வெண்காட்டை குறிப்பிடுகிறார் கபிலதேவநாயனார் இரட்டை மனிமாலையில்வெண்காடர் அன்பர் சித்தத்தடங்குவர் எனப்பாடியுள்ளார் பரணதேவநாயணார் வெண்காடா வேலைவிடமுண்டாய் வெள்ளேற்றாய் வெண்காடாஎன்பேன் நான் என அருளியிருக்கிறார் பட்டினத்தாரும் நினைவார்க்கருளும் பிரான் எனத்தொடங்கும் பாடலிலும்
சேக்கிழார் காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் சோமசுந்தர தேசிகர் பரஞ்சோதிமுனிவர் கச்சியப்ப சிவாச்சாரியார் சைவ எல்லப்ப நாவலர் முதலியோர்களால் பாடல் பெற்ற தலம் சிதம்பரம் போலவே நடராஜர் கோவில் அகோரமூர்த்தி மருத்துவாசுரன் எனும் அரக்கனை அழித்த தலம் சீர்காழியில் இருந்து ஒன்பது கிமீ. தூரத்தில் பூம்புகார் போகும் வழியில் திருவெண்காடு உள்ளது.










