நான் யாரிடம் கேட்பது – ஓஷோ ஜோக்ஸ்
ஒரு ஆங்கிலேயன் , ஒரு புகை வண்டியிலிருந்து வெளியே வந்தான்.
அவனை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள்.
அவனைப் பார்த்ததும் , அவள் ,” என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் ? “ என்று கவலையோடு கேட்டாள்.
அவன்,” ஒன்றும் கேட்காதே,
எவ்வளவு நீண்டதூர பிரயாணம்.
மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன் .
அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது,.” என்றான்
அவள் “ நீங்கள் யாரிடமாவது கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே.
உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே ? “
அவன் , “ நான் அப்படித்தான் நினைத்தேன்
ஆனால், என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை , நான் யாரிடம் கேட்பது? “ என்றான்.










