நீ புதைத்ததை நீயே எடுத்துவிடு இல்லாவிட்டால் – நீயே புதைக்கப்படுவாய்.
மறந்த நோய்த்தடுப்பு மரபுகள்
1. இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது.
2. வாசல் வாளி நீரில் கால் கழுவி பிறகு வீடுநுழைந்தது.
3. மஞ்சள் பூசி குளித்தது தெளித்து விளையாடியது.
4. உணவில் மிளகு சுக்கு மஞ்சள் சேர்ந்தது.
5. வேப்பங்குச்சி உப்பு கொண்டு பல் துலக்கியது.
6. மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது
7. வருடம் ஒரு முறை வீட்டிற்கு வெள்ளை அடித்தது.
8. மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி ஏற்றி புகை போட்டது.
9. எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை தலை வாசலில் தொங்க விட்டது.
10. பெரிய காரியம் மற்றும் நெரிசல் மிக்க இடங்களில் இருந்து திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டிற்கு வெளியே வைத்தது. பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தது.
11. வெற்றிலை பாக்கு போடுவதும்
12. கசாயம் குடிப்பதும்
13. வெள்ளாவியில் உடை வெளுத்தது
இவை அனைத்துமே கிருமியை தடுப்பதும் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் சுத்தமாக வாழ்வதும் மட்டுமே என்பது புரியாமல் இன்று நடக்கும் பெரு அழிவில் பங்காளர்களாக இருக்கிறோம்
நீ புதைத்ததை நீயே எடுத்துவிடு இல்லாவிட்டால் நீயே புதைக்கப்படுவாய்.











