தியானம் வெளிப்படையான ஒரு கண்ணோட்டம்.
தியானம் செய்யும்போது என்னால் அதில் கவனம் செலுத்த முடிவதில்லை
எண்ணங்கள் ஊர் மேய்கின்றன. அடுத்தடுத்து எண்ணங்கள் அலைகள் போல.
எப்போதடா எழுந்திருப்போம் என்று இருக்கிறது.
நமக்கு இதெல்லாம் சரிபட்டு வராது.அந்த நேரத்தில் வேறு வேலை வெட்டியை பார்க்கலாம்.
இது பொதுவாக என்னோடு அடிக்கடி கை குலுக்கும் கேள்விகள்.
தியானம் செய்ய வேண்டுமே என்று பிடிவாதமாக அமரும் எண்ணத்தை முதலில் மாற்றுங்கள். இது மிகவும் முக்கியம்.
.
எதையும் விருப்பத்தோடு, ஆழ்ந்த ஈடுபாட்டோடு செய்தாலே எந்த செயலும் சிறக்கும்.
சும்மா Relaxஆக எந்த எதிர்பார்ப்புமின்றி அமருங்கள்.
நீங்கள் ஆக்கினையில் தவம் செய்பவராக இருந்தால் புருவ மத்தியில் Just கவனம் செலுத்துங்கள். என்ன நடக்கிறது என்று ஆர்வத்தோடு ஆரம்பத்தில் கவனியுங்கள்
அருட்தந்தை அழகாக கூறுவார்,,, அடம் பிடிக்கும் குழந்தை போல மனம் விரும்பிய திசையில் ஓடும்.
அதன் போக்கிலேயே விட்டு, அடம் பிடிக்கும் குழந்தையை சமாதானப்படுத்துவது போல, இப்பொழுது தவம் செய்ய அமர்ந்திருக்கிறோம். இதில் கவனம் செலுத்துவோம் என்று மெல்ல மெல்ல மனதை மூலத்தை நோக்கி திருப்புங்கள் என்று கூறுவார்.
எதுவுமே உடனே கைவசமாகாது. நாட்கள் செல்ல செல்ல மனம் அலை நீளம் மெல்ல குறைய குறைய தியானம் மெல்ல வசப்பட ஆரம்பிக்கும்.
முதலில் கத்தி மேல் நடப்பதை போலதான். மனம் முரண்டு பிடிக்கும். அதை வென்று நம் வசமாக்குவதே முதல் படி.
பின் மனமே தன்னுள் தானே அடங்கி, மன அலை நீளம் குறைய குறைய, இறையை,மூலத்தை நோக்கிய பயணம் இனிமையாக இருக்கும்.
அவரவர் அனுபவமே அவரவர்க்கு.
விளக்குதல் கடினம்.
எவரேனும் தியானத்தின் இறுதி நிலை இறையும் நாமும் ஒன்று என்று இவ்வாறு உணர்ந்தேன் என்று கூறினால் அதை எல்லாம் நம்பிக் கொண்டிருக்காதீர்கள்.
அந்த நிலைக்கு சென்றவர் எவரும் அதை விளக்க மாட்டார்கள். சொற்களால் விளக்கவும் முடியாது.
விண்டவர் கண்டிலர்
கண்டவர் விண்டிலர்
மகரிஷி அவர்களே” நான் பாழாய்விட்டேன்” என்று அந்த எண்ணமற்ற நிலையை கூறுவார்.
ஓஷோவில்,எண்ணங்களை தனக்கு சம்பந்தமே இல்லாதது போல எண்ணங்கள் வருவதையும் செல்வதையும், அடுத்த எண்ணம் மலர்வதையும் Just observe என்று
ஆரம்ப கட்டசாதகர்ளுக்கு சொல்வார்கள்.
மேலும் எளிமையான சுவாச தியானம். பின் படிப்படியாக அடுத்த கட்டம்.
ரமண மகரிஷி ஒரே கேள்வி. நான் யார்? உலகையே தன்னை திரும்பி பார்க்க வைத்தார்.அந்த ஒரு உள்முக பயணமே உங்களை கரை சேர்த்து விடும்.
ஜென், சூஃபி தத்துவங்களும் மேலோட்டமாக பார்த்தால் எளிமை ஆழ்ந்து உள்ளே சென்றால் நம்மை இழப்போம்.
எந்த தியானமாக இருந்தாலும், அதன் basic concept எண்ணமற்றநிலை நோக்கிய பயணமே, தானே இறை என்ற மையக் கருத்தை உணர்வதே.
இதனை தெளிவுபடுத்தவே பல விளக்கங்கள், தியான முறைகள் etc etc.
ஓஷோவும் கூறுவார் : உங்களுக்குள் ஒரு புரிதல் உணர்ந்து விட்டால், நான் சொன்ன எல்லாவற்றையும் மறந்து விடுங்கள்.
இது ஒரு திசையறியா, எவருமறியா, உதவிக்கு யாருமில்லாத, நம்முள் நாமே பயணிக்க வேண்டிய அற்புத உள்முக பயணம் என்று மட்டும் தெளிவாக இருங்கள்.
ஞானிகள் உணவிருக்கும் இடத்தை சுட்டி காட்டுவார்கள். அவ்வளவுதான் முடிந்தது அவர்கள் ஞான உபதேசம்.
உணவிருக்கும் இடத்திற்கு சென்று உண்டு பசியாற வேண்டியது நாமே.
உங்களக்கு பிடித்த ஞானிகளின் தியான முறையை புரிந்து கொண்டு உள்முகமாய் பயணிக்க வேண்டியது நீங்களே
குரு என்பவர் வழிகாட்டியே. புரிந்து கொண்டு உள்முக பயணம் செய்ய வேண்டியது அவரவர் விருப்பமே.
இறையே குருவே சரணம் சரணம்.










