பூமிக்கு வெளியே காலம் என்ற ஒன்று கிடையவே கிடையாது.
சூரிய வெளிச்சம் இருந்தால் பகல் என்கிறோம். சந்திரன் இருந்தால் இரவு என்கிறோம்…
முடிந்து போன செயலை ஞாபகப்படுத்தும் போது, போன வாரம், போன மாதம், என்கிறோம். இனி செய்ய வேண்டிய செயலை, நாளை, அடுத்த மாதம், இப்படி சொல்கிறோம்.
இவை அனைத்தும் மனதோடு இந்த பூமியில், சமூகத்தில் வாழ நாம் உருவாக்கி கொண்டது.
உண்மையில் இந்த கணம் மட்டுமே உண்டு. அடுத்த நொடி வரும் போதும் , அந்த கணம் என்பது தான் உண்மை. இவை அனைத்தும் நமது மனதின் கணக்கு ஆகும்.
உதாரணமாக, பூமியை விட்டு விண்ணில் ஒரு மனிதன் இருந்தால், அவனுக்கு திசைகளோ, நேரம், காலமோ தெரியாது.
தியானிக்கும் ஞானிகள் , தன்மனதை கடந்தவுடன்,இந்த நொடியை தான் அனுபவிக்கிறார்கள்.
இந்த நொடியை அனுபவிக்கும் போது தான், தனது உயிர்த்தன்மையை யும், கடவுள் தன்மையையும் உணர்கிறார்கள்.
இதனால் தான் இறந்தவரை, காலமாகி விட்டார் என்று சொல்கிறார்கள்.
இந்த உடலில் வாழும் வரை தான் நமக்கு காலம் இருக்கிறது.
ஞானமடைந்த ஞானிகள்,காலமற்ற தன்மையை (நிகழ்காலத்தை )தெளிவாக உணர்கிறார்கள்.











