நம் நாட்டில், எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் கும்பாபிஷேகம் நடந்தாலும் அந்த நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா? என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்கள். அவ்வாறு வட்டம் இடாமல் இருந்தால், யாகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கலாம்? என்று முடிவு செய்வர். கருடன் வட்டமிட்ட பிறகே, திருக்குட முழுக்கு நடைபெறுவது வழக்கம்.
இதற்கு காரணம் கருடன் வேத படிவமானவன். வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருள்வது தானே முறையாகும். ஆனால் சரியான வேத வேள்வி நடக்காத போது அவ்விடத்தில் அவனுக்கு என்ன வேலை? எனவே தான் கருட தரிசனத்திற்கு பிறகே கும்பாபிஷேகம் முழுமையாக நடத்தி மகிழ்கின்றனர்.











