அகத்தியர் பாடல் & அகஸ்தியர் குரு பூஜை
அகத்தியர் பூசையின் போது இந்த பாடல் கேட்டிருக்கின்றோம். கொங்கணர் கடைக்காண்டத்தில் இந்தப் பாடல் வருகின்றது. இதோ அந்தப் பாடல்…
அகத்திய மாரஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேடமீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக்கொள்வார்கள்
அகத்தியரைத் தொண்டனிட்டு மேரு செல்ல
யாருக்கும் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியார் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.
-கொங்கணார் கடைக்காண்டம்.
ஆனால் உச்சரிக்கும் போது அகத்திய மகரிஷி நம என்றென்றோது என்று கூறுவதாக கேட்டுள்ளோம். சித்தர் பாடல் கிடைத்தால் நாம் எந்த செய்தி சரி என்று பின்வரும் நாட்களில் உறுதி செய்கின்றோம்.சரி…மகான்களை பூசித்தால் மனம் மகிழும், ஒடுங்கும்,ஓங்கும்.
ஒன்பது கோடி ஞானிகளுக்கு தலைவரும் கும்பமுனி என்றும் குருமுனி என்றும் பட்டம் பெற்ற ஆசான் அகத்தீசர் அவர்களின் திருவடியை பூசித்துதான் ஒன்பது கோடி மனிதர்களும் பாவத்தை நீக்கி புண்ணியத்தைப் பெற்று மரணமில்லா பெருவாழ்வு பெற்று ஞானிகள் ஆகியுள்ளார்கள்.
அகத்தியர் என்ற பெயரை உச்சரிக்கவே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எந்த பிறப்பில் நாம் செய்த புண்ணியமோ நம்மை சித்தர் மார்க்கத்தில் ஈடுபட வைத்துள்ளது. ஞாலம் சிறக்க ஞானிகளை போற்றுங்கள். போற்றினால் நமது வினை அகலுமப்பா..
அகஸ்தியர் குரு பூஜை திருமந்திர நகர் ( தூத்துக்குடி ) ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் குருமுனி அகஸ்தியருக்கு குருபூஜை காலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது முடிந்தவர்கள் கலந்து கொண்டு சித்தர் பெருமான் அருள் பெற அழைக்கிறோம்.











