அன்னபூரணி விரதம் உகந்த நாள் வழிபடும் முறை பலன்கள் என்னென்ன?💫💫
👆🎋👆🍂👆🍃👆🍀👆💐👆🪴👆🌴
வறுமையை நீக்கும் அன்னபூரணி விரதம்.!
🍚 கஷ்டங்களையும், நஷ்டங்களையும் கடந்து ஒருவருக்கு அன்னம் எனும் உணவு வாழ்நாள் முழுவதும் தங்கு, தடையில்லாமல் கிடைக்க அருள்புரியும் தெய்வம் ஸ்ரீஅன்னபூரணி தேவி.
🍚 அன்னபூரணிதான் விவசாயத்தை செழிக்கச் செய்கிறாள். உலக உயிர்களுக்கு தேவையான தானியங்களை பெருக்கி தருகிறாள். ஒவ்வொரு உயிருக்குமான உணவை, அன்னபூரணியே வழங்குகிறாள்.
🍚 அன்னபூரணியை விரதமிருந்து பூஜை செய்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
🍚 அன்னபூரணி தேவியை விரதமிருந்து வழிபடக்கூடிய பூஜையை ஒவ்வொரு மாதத்தில் வருகிற வளர்பிறை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறப்பு.
🍚 அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வருகிற செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்வது கூடுதல் சிறப்பு. பௌர்ணமி, அமாவாசை தினங்களிலும் விரதமிருந்து வழிபடலாம்.
அன்னபூரணி வழிபாட்டை திருமணமான பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தால் மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
வழிபடும் முறை :
🍚 அன்னபூரணி பூஜையை செய்ய விரும்புபவர்கள் தங்கள் வீட்டு பூஜையறையை சுத்தம் செய்து, ஒரு பீடத்தின் மீது வெள்ளை துணியை பரப்பி, அதன் மீது ஒரு சிறிய செம்பு அல்லது வெள்ளி கிண்ணத்தில் உயர்தரமான அரிசி தானியங்கள் வைக்க வேண்டும்.
🍚 பிறகு அக்கிண்ணத்தில் வைக்கும் அளவிற்கு சிறிய அளவிலான அன்னபூரணி சிலை அல்லது படத்தை அக்கிண்ணத்தில் வைத்து, பின்பு மலர்கள் சமர்ப்பித்து, பழங்கள் மற்றும் இனிப்புகளை நைவேத்தியமாக வைத்து தூபங்கள் காட்ட வேண்டும்.
🍚 பூஜையை தொடங்கும் முன்பு விநாயகருக்குரிய மந்திரங்கள் ஓதி, பிறகு அன்னபூரணி தேவிக்குரிய மந்திரங்கள், துதிகள் போன்றவற்றை துதித்து, தேவியின் சிலைக்கு ஆரத்தி காண்பித்து வழிபட வேண்டும். அப்போது, அன்னபூரணி காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபடுங்கள்.
ஓம் பகவத்யை காசிவாசின்யை சவித்மஹே
மாஹேச்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்
🍚 அதாவது, பஞ்சமில்லாத வாழ்வைத் தரும் பகவதியே, உலக உயிர்களுக்கு அன்னமளிக்கும் மகேஸ்வரியே. காசியம்பதியில் வீற்றிருக்கும் அன்னபூரணி அன்னையே எங்களுக்கு அருள்வாயாக! என்று வேண்டிக்கொள்ளுங்கள்.
🍚 இந்த பூஜையை செய்து முடிக்கும் வரை உணவேதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு. காலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல் விரதமிருந்தும் இப்பூஜையை செய்யலாம்.
🍚 இவ்விரதத்தை கடைபிடிப்பதால் குடும்பத்தில் பட்டினி, பசி, நோய், வறுமை மற்றும் தரித்திரம் நீங்கி பொருளாதார நிலை மேம்படும். அன்னபூரணி தேவியை வேண்டி விரதமிருந்து பூஜித்து வந்தால் நிச்சயமாக துன்பங்கள் தீரும்.











