• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஆபஸ்தம்ப ஸுத்ரம்

siddharbhoomi by siddharbhoomi
July 31, 2025
in பொது
0
ஆபஸ்தம்ப ஸுத்ரம்

ஆபஸ்தம்ப ஸுத்ரம்

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஆபஸ்தம்ப ஸுத்ரம்

ஜலத்தை அந்தரத்தில் நிறுத்திய ஆபஸ்தம்பர்.

யஜூர் வேதம் அனுசரிக்கும் ப்ராஹ்மணர்கள் முக்கால் வாசி பேர் ஆபஸ்தம்ப ஸுத்ரத்தை சேர்ந்தவர்கள் ! ஆனால் இந்த ஆபஸ்தம்பர் என்ற ரிஷி யார் ? இவர் பெயர் காரணம் என்ன ?

ஒரு சமயம் வேதவிற்பன்னரான ப்ராஹ்மணர் ஒருவர் ஸ்ராத்தம் செய்தார். போஜனம் செய்விக்க ஒரு ப்ராஹ்மணருக்காகக் காத்திருந்தார். வெகு நேரம் கழித்து ஒரு பிராஹ்மணர் வந்தார். அவர் நல்ல பசியுடன் இருந்தார். அவரை அமர்த்தி இலை போட்டு தானே பரிமாறினார் கர்த்தா.

வந்த ப்ராஹ்மணர் சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அதிகமாகச் சாப்பிட்டார். ப்ராஹ்மணனுக்கு நல்ல பசிபோலும் என்று எண்ணி இவரும் கேட்கக் கேட்கப் போட்டார். போடப் போட அனைத்தும் ஒரு நொடியில் காலியாயிற்று!

கர்த்தாவின் கண்களில் முதலில் இருந்த வினயம் மறைந்து ஏளனம் குடிகொண்டது. அதைத் தன் செயல்களிலும் காட்டினார். அதைப் பொருட்படுத்தாத அதிதி ‘இன்னும் போடு!¸ ‘இன்னும் போடு!’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அபரிதமாக உண்டும் த்ருப்தி யடையாமல் தனக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுக்க இவர் வந்திருக்கிறார் என்று கர்த்தா நினைத்தார். சமைத்தவை எல்லாம் காலியாகிவிட்டன! ‘இன்னும் வேண்டும்! கொண்டு வா!’ என்று ப்ராஹ்மணர் கேட்கவே கர்த்தாவுக்குக் கோபம் வந்துவிட்டது.

காலியான சமையல் பாத்திரத்தைக் கொண்டுவந்து பிராஹ்மணரின் இலையின் மேல் கவிழ்த்து ‘த்ருப்தி ஆயிற்றா!’ என்று கேட்டார். (போஜனம் முடிந்தபோது கர்த்தா ப்ராஹ்மணர் களை ‘த்ருப்தாஸ்தா’ என்று கேட்கவேண்டும்.

திருப்தியடைந்த ப்ராஹ்மணர்கள் ‘த்ருப்யத:’ என்று 3 முறை சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் ஶ்ராத்தம் நல்ல முறையில் பூர்ணமடைந்தது என்று அர்த்தம்) ஆனால் அந்த பிராஹ்மணர் ‘ந’ என்று சொன்னார்! ‘எனக்கு திருப்தி இல்லை’ என்பது இதன் பொருள்.

கர்த்தாவுக்கு கோபம் தலைக்கேறியது. ‘இவர் கேட்கக் கேட்க கொண்டுவந்து கொட்டினேனே! மலை போல உணவுப் பண்டங்களைத் தின்றுவிட்டு திருப்தி இல்லை என்று சொல்லி என்னை அவமானப்படுத்தி நான் செய்த ஶ்ராத்தத்தையும் இந்த ப்ராஹ்மணர் கெடுத்துவிட்டாரே’ என்று சினந்தார்.

கர்த்தா நல்ல தபஸ்வியே. கோபத்தால் முகம் சிவந்த அவர் சாபம் கொடுக்க கையில் ஜலத்தை எடுத்து அபிமந்திரித்து பிராஹ்மணரின் தலையில் எறிந்தார்.

அப்பொழுதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. வந்த பிராஹ்மணர் தன் கை அசைவினால் அபிமந்திரித்து எறிந்த ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தினார்!

கர்த்தா இதைப் பார்த்து பிரமித்து நின்றார். தான் எறிந்த நீரை அந்தரத்தில் நிறுத்திய அவர் சாதாரண மனிதர் அல்ல¸ தன்னை விட உயர்ந்தவர் என்பதை அறிந்து¸ ‘பூஜ்யரே! நீங்கள் யார்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு அந்த பிராஹ்மணர் பதிலளித்தார். ‘நான் ஒரு முனிவன். நான் அதிகம் உண்டதால் என்னை ஏளனம் செய்தாய். உன் பார்வை களாலும் செயல்களாலும் என்னை அவமதித்தாய்.

ஶ்ராத்தத்திற்கு வரும் பிராமணர் களிடம் உன் மூதாதையர்களின் ஒரு அம்சத்தை வைத்து பகவான் அனுப்புகிறான் என்பதை மறந்து நீ நடந்து கொண்டாய். உனக்கு புத்தி புகட்டவே நான் இப்படி நடந்து கொண்டேன். ஶ்ராத்தத்தை பய பக்தியுடன் கோப தாபங்களை விட்டுச் செய்யவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்!’ என்றார்.

அதற்குக் கர்த்தா¸ ‘ஸ்வாமி! என் தவறை நான் உணர்ந்து கொண்டேன். க்ஷமியுங்கள். இனி இம்மாதிரித் தவறுகளைச் செய்யமாட்டேன். நான் செய்த ஶ்ராத்தம் பூர்ணமாகவில்லையே! அதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என்று வினவினார்.

அதற்கு அந்த பிராஹ்மணர்¸ நான் ‘ந’ என்று சொல்லி ஶ்ராத்தம் பூர்ணமாகாமல் இருக்கிறது. புருஷ ஸூக்தம் பாராயணம் செய்!

இந்த தோஷம் பரிகாரம் ஆகும்!’ என்றார். அதை பாராயணம் செய்து ஶ்ராத்தத்தை முடித்தார் கர்த்தா.

ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தியதால் அவரை ஆபஸ்தம்பர் என்று அழைத்தார்கள்.

ஶ்ராத்த காலத்தில் புருஷ ஸூக்தமும் காடகோபநிஷத்தும் பாராயணம் செய்யும் நியமம் இருக்கிறது. ஆப என்றால் நீர். நீரை ஸ்தம்பிக்க வைத்து அந்தரத்தில் நிறுத்தியதால் அவர் ஆப ஸ்தம்பரானார்.

ஆபஸ்தம்பரின் க்ருஹ்ய சூத்ரம் பிரஸித்தமானது.

போதாயண மஹரிஷியின் சிஷ்யர்  ஆபஸ்தமபர்🙏🌹

Previous Post

இன்பம் நிலைக்க வழி

Next Post

கிருஷ்ணரைக் காண வழிகாட்ட முடியுமா?

Next Post
கிருஷ்ணரைக் காண வழிகாட்ட முடியுமா?

கிருஷ்ணரைக் காண வழிகாட்ட முடியுமா?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »