நீண்ட காலமாக ஒரு சொந்த வீடு அமையாதவர்களுக்கும்..
அமைந்த வீட்டில் வாஸ்து கோளாறு இருப்பதாக அவஸ்தை படுபவர்களுக்கும்..
மனை,நிலம், வீடு சம்மந்தமாக தீராத வழக்கு உள்ளவர்களுக்கும்..
அவரவர் பிரச்சனைகள் தீர மிகச்சிறந்த பரிகாரத்தலம் !
“அருள்மிகு பூமி ஈஸ்வரர் ஆலயம்..குடிமல்லூர்..!!”
(வேலூர் மாவட்டம் வாலாஜா ஒன்றியம் வாலாஜா தாலுக்கா குடிமல்லூர் ஊராட்சி குடிமல்லூர் கிராமம்)
மிகவும் பழமையான திருக்கோயில்களுள் இத்தலமும் ஒன்று !
சுமார் 1000 வருடங்கள் பழமையான புரதான கோயில். !
கோயில் சிதிலமடைந்து சமீப காலமாகத்தான் சிறிது சிறிதாக புதுப்பிக்கப்பட்டு ஆலய வழிபாடு நடத்தப்படுகிறது !
இன்னமும் கோயில் முழுவதுமாக புனரமைக்கப்படவில்லை !
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக கூறப்படுகிறது !
ஒவ்வொரு வாஸ்து நாளான்றும் பூமிநாதருக்கு சிறப்பு அபிஷேகமும்
அவருக்கு நேர் எதிரே சன்னதிக்கு எதிரில் வாஸ்து நேரத்தில் யாகம் வளர்த்தப்பட்டு பூஜிக்கப்படுகிறது !
ஆலயத்தில் இருந்து சிறப்பாக பூமி நாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தம் பகதர்களுக்கு வழங்கப்படுகிறது..!
அத்தீர்த்தை எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஆலய குருக்கள் வழிமுறைகளோடு விளக்குகிறார்கள்..!
குடியிருக்கும் வீட்டில் ஸ்ரீபூமிநாதரை மனதில் கொண்டு தீர்த்தம் தெளித்தால் வீடு மங்களமாகி சுபிட்சம் பெறும்..!
புதிய வீடு கட்டுபவர்கள் அந்த தீர்த்தத்தை வீட்டின் கடக்கால் பகுதிகளில் ஊற்றி பவுண்டேசன் போட்டு வீடு கட்டுகிறார்கள்..!!
நிலம், மனை, வீடு, சம்மந்தப்பட்ட சகல விஷயங்களுக்கும்…
ஸ்ரீ பூமிநாதரை பக்தர்கள் அனுகி தரிசித்து நம்பிக்பையோடு வேண்டிக் கொள்கிறார்கள் !
தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தங்கள் வீடு சொத்து சம்ந்தப்பட்ட ஆவணங்களை அவர் சன்னதியில் அவருக்கே சமர்ப்பிப்பதாக கருதி..
அர்ச்சனை செய்து தங்கள் நன்றியை செலுத்தி அதன் பிறகு வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள் !
சிவபெருமான் நெற்றி வியர்வையின் ஒருதுளி இங்கு விழுந்ததாகவும்
அதிலிருந்து சிவ பெருமான்
கூர்ம மாகவும் சுயம்பு வடிவிலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்துள்ளார் !
பல்லவர் காலத்தில்தான் ஆவுடையார் அமைக்கப்பட்டு சிவஸ்தலமாக முழுவடிவில் அமைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள் !
பூமியில் விழுந்த வியர்வைத் துளியாள் உண்டான சிவன் ஆனதால் அவரே வாஸ்து பகவானாகவும் பூமிநாதராகவும் அருள்பாலிக்கிறார் என்பது பக்தர்களின் அசையா நம்பிக்கை !!
அருள்மிகு ஸ்ரீ பூமிநாதர் ஆவுடையார் மீது அமைந்த லிங்க ரூபமாக கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார் !
அம்பாள் தனிசன்னதி கொண்டு தெற்கு நோக்கி சௌந்தர நாயகி என்கின்ற அழகுவள்ளியாக அருள் பாலிக்கிறார் !
அமைவிடம் :
வேலூர் – சென்னை நெடுஞ்சாலையில் வாலாஜாப்பேட்டையில் இருந்து தெற்கு நோக்கி சுமார் 03 கிமி தொலைவில் பாலார் அணைக்கட்டு சாலையில் குடிமல்லூர் கிராம கூட்ரோடில் இருந்து..
மேற்கே ஒரு கிமி தொலைவில் குடிமல்லூர் கிராமத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது !
வாலாஜா பேருந்து நிலையத்தில. இருந்து ஆட்டோ ஷேர் ஆட்டோ வசதிகளும் உண்டு !
ஆலய நேரம் :
வாஸ்து நாட்களில் மதியம் வரையிலும்..
பிரதோஷ காலங்களில் மதியம் முதல் மாலை வரையிலும் தரிசிக்கலாம்..!
சாதாரண நாட்களில் ஆலயத் தொடர்பு கொண்டு செல்வது உத்தமம் !!










