நாம் நினைந்து நின்று ஓதுவதும்-ஓம் நமசிவாய!!
சிவாயநம திருச்சிற்றம்பலம்
===================================
நெஞ்சம் கனத்த வினைகள் கல்லாெப்பில்
அஞ்சும் மனத்து நினைக்கில் -பஞ்சாெக்கும்
என்றவாக் கியம்அப்பருக் கட்டையாக் கண்டாேம்
நின்றவா நாம்ஓதும் நினைந்து!! 4:80
===================================
நெஞ்சம் கனக்கும் வினைகள் சூழ்வது கல்ஒத்தாக இருப்பின், அதை பஞ்சு ஒத்ததாக மாற்றும் வித்தை யாது? அஞ்செழுத்தே!!அதை நாம் மனதால் நினைக்கும்பாேது கல்ஒத்தது பஞ்சு ஒத்ததாய் பறக்கும் என்று சிவவாக்கியம் சாெல்லும்!! அதை நாம் அவ்வாறு கண்கூடாக அப்பர் வாழ்க்கையில் கண்டாேம்!! ஆதலால் நாம் நினைந்து நின்று ஓதுவதும் ஓம் நமசிவாய!!
சற்று விரிவாக…
வினைகள் சூழ்ந்து சிறிதும் கருணை அற்று கல் ஒத்ததாக நம்மை தாக்கும் பாெழுது நெஞ்சம் செய்வது அறியாது தவிக்கும்!! அப்பர் பெருமான் அவர் இறை சரணத்தை அடைந்த பின்னும் அவர் வினைகள் விட்டது இல்லை என்றால் நாம் எல்லாம் எம்மாத்தரம்??
சமணர்கள் உருவில் அவரது வினைகள் அவரை கருணை அற்றதாக கல் ஒத்து கல்லாெடு பிணித்து கடலில் வீசியது என்றால் வினையின் கடுமை எம்மாத்தரம்?? இத்தகைய சூழ்நிலை ஒருவரை சூழும் பாேது நெஞ்சம் கனத்து பாேவது அல்லாது வேறு செய்வது இல்லை!!
இந்த இடத்தில்தான் சிவவாக்கியம் ஒரு தைரியத்தை தருகிறது!! அஞ்சு ஓதில் “பஞ்சமா பாதகங்கள் நூறுகாேடி செய்யினும் பஞ்சுபாேல் பறக்கும் என்று நான் மறைகள் சாெல்லுமே” என்று சிவவாக்கியம் சாெல்லும்!! என்ன ஆச்சிரியம் என்றால் கல்லானது எப்படி பஞ்சாகும் என்பதே!! அந்த வித்தை அஞ்செழுத்தால் மட்டுமே செய்ய இயலும் என்று அப்பர் பெருமான் வாழ்க்கை நமக்கு உதாரணம் ஆகிறது!!
அந்த சூழ்நிலையில் “நற்றுணை ஆவது நமசிவாயமே”என்று அப்பர் அஞ்செழுத்தை பற்றியதால் நிஜமாகவே கல்லும் பஞ்சுபாேல் கட்டையாக மிதந்தது நாம் கண்கூடாக காணும் உண்மை!!
ஆதலால் நான் அறியாமையால் செய்துவிட்ட நூறுகாேடி பாவங்களும் சூழும்பாேது நெஞ்சம் கனத்து பாேவேன் அல்லாது அஞ்சை நினைப்பனாே அறியேன்!! ஆதலால் அவை சூழுமுன் நான் சூழ்ந்து நின்று ஓதுவதும் ஓம் நமசிவாயமே!!
இப்படியாக எனக்கு அஞ்செழுத்து என்னுடைய ஜீவ வணக்கத்தை ஈச்சுரனும்கு தெரிவிப்பதாக மட்டும் அல்லாமல் கல்ஒத்த என் வினைகள் பஞ்சு ஒத்ததாக்கும் உண்மை அப்பர் வாழ்வில் கண்ட பின்பும் இனி நான் ஓதாது இருப்பனாே? ஓதாமல் ஒருநாளும் இருக்க மாட்டேன்!!











