அன்பு குழந்தையே…. கலங்காதே உனக்கான நேரங்கள் தொலைவில் இல்லை. அது உன்னை தேடி வந்து கொண்டு இருக்கிறது பிள்ளைகளின் நலம் விரைவில் சீராகும்.
நான் கம்பீரமாக உனது மனதிலும் உனது இல்லத்திலும் அமர்ந்து கொண்டு இருக்கிறேன். ஏன் உனக்கு தெரியவில்லையா. மனதில் நினைத்தாலே போதும் தினமும் என்னை பூஜித்தால்தான் உன்னை நான் நினைப்பேனா இல்லை.
யோசித்து பார். நீ இன்று இருப்பதை விட இதற்கு முன்பு பல வேதனைகள் மனகசப்புகள், உறவுகளுடன் பூசல்கள், ஆசைஆசையாய் வாங்கியது கைவிட்டு போனது நிம்மதியை இழந்தாய்.
ஏன் தினசரி வாழ்க்கை நடத்துவதற்கு நீ பட்ட கஷ்டங்கள், போதுமப்பா இந்த வாழ்க்கை போதும் என்று அழுது புலம்பினாய் மறந்து விட்டாயா? அனைத்தும் நான் அறிவேன். அனைத்தும் நன்மைக்கே இன்று எப்படி இருக்கிறாய் தினமும் என்னை பூஜித்தாய். ஆனால் நான் உன்னிடத்தில் எப்படி வந்து சேர்ந்தேன்.
நீ எனது பொக்கிஷம். நீங்கள் அனைவரும் எனது துவாரகாவமாயீன் குழந்தைகள். எனது அனுமதியின்றி எவரும் உன்னை தொடமுடியாது. இனி நீ நினைத்த வாழ்க்கை உனக்கு கிடைக்கும்.
என் வாக்கு என்றுமே பொய்யாகாது உறவுகள் உன்னை பாராட்டும். பிள்ளைகள் உனக்கு பெருமை சேர்ப்பர். பொறுமையாக இரு. நான் எனது அதிசயத்தை நிகழ்த்துவேன். அனைத்தையும் ஜெயமாக்குவேன். அப்பா நான் இருக்கிறேன் கலங்காதே எதற்க்கும்…” ஓம் ஸ்ரீ சாய் ராம்…











