துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!
துபாயில் உள்ள ஜெபல் அலியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவில் விஜய தசமி முதல் பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது.
துபாயின் ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.
கோவிலின் அடிக்கல் 2020 பிப்ரவரியில் நாட்டப்பட்டது. தசரா பண்டிகையையொடடி , இன்று கோயில் திறக்கப்பட்டது. இந்த பகுதியில் வழிபாட்டுத்தலம் வேண்டும் என்ற இந்தியர்களின் பல நாள் கால கனவை இது நிறைவேற்றியுள்ளது.
தசரா பண்டிகை நாளான அக்டோபர் 5-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக கோயில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும். அனைத்து மதத்தினரும் இங்கு நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
ஒன்பது உயரமான வெள்ளை பளிங்கு சிகரங்கள், சுவர்களில் சமஸ்கிருத வசனங்கள் பொறிக்கப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட தூண்கள் உட்பட பல அம்சங்களைக்
கொண்டுள்ளது. கோவிலின் கதவுகள் வால்நட் மரத்தால் செய்யப்பட்டவை. இந்த கோவில் பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது.
டஜன் கணக்கான யானைகள் மற்றும் உயரமான கான்கிரீட் தூண்கள், ஒரு பரந்த எண்கோண தேவாலயம், ஒரு தனித்துவமான மேடை ஆகியவை கோயிலின் சிறப்பைக் கூட்டுகின்றன.
திருமணங்கள், ஹோமம் மற்றும் பிற தனிப்பட்ட நிகழ்வுகளும் இங்கு அனுமதிக்கப்படும்.
இந்த ஆலயம் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பலிபீடங்கள் அல்லது சன்னதிகள் கொண்ட ஒரு பிரார்த்தனை மண்டபம் மட்டுமே உண்டு.
ஒன்று சிவனுக்கும் ஒன்று கிருஷ்ணருக்கும் . ஷீரடி சாய்பாபாவிற்கும் மூன்றாவது பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது .
இந்த கோவில் துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது .
1958 ஆம் ஆண்டில், ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் , பர் துபாயில் உள்ள பழங்காலக் கடைகளின் மேல் ஒரு இந்துக் கோயிலை முதல் தளத்தில் கட்ட அனுமதித்தார்.
இந்த ஷாப்பிங் சென்டர் “பர் துபாய் ஓல்ட் சூக்” என்று அழைக்கப்படுகிறது மற்றும் துபாய் க்ரீக்கின் மேற்கே பர் துபாய் எனப்படும் பகுதியில் அமைந்துள்ளது .
1958 ஆம் ஆண்டு கட்ட அனுமதிக்கப்பட்ட இந்த கோவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரே கோவிலாகும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் ஒப்பிடும்போது இந்த கோயில் ஒப்பீட்டளவில் சிறியது.
இந்தக் கோயில் சிந்தி குரு தர்பார் கோயிலின் விரிவாக்கம் தான்.











