செப்படி வித்தையாய்ச் சிந்தையுட் புகுந்தெனைத் திகைப்பினில் ஆழ்த்தி இந்தச் சிறியனேன் தன்னை நீ சிரிக்கவும் களிக்கவும் செய்ததில் திளைத்து நின்றேன் அப்படி என்னவோர் அவசரம்
ஐய என் அகத்தை விட்டேனகன்றாய்
அங்குள அழுக்கெலாம் கண்டதால் அஞ்சிநீ அடியனைத் துறக்கலாமோ!
இப்படிச் செய்வதோர் இரப்பவர்க் கருந்தனம் ஈந்தபின் அதைப்பறிக்கும்
இரக்கமில் மானிடர் இத்தரை மீதினில் இயற்றிடும் செய்கை அன்றோ
தப்புநான் செய்வதென் தொழிலதைத் திருத்த உன் தாள்மலர் தன்னை என்னுள் சந்ததம் தாங்கிடும் தகைமையைத் தருவது தாதை
உன் கடமை அன்றோ!
ஓம்நமசிவாய











