செந்தூர் செல்லும் தென்றல் காற்றே
முருகனைக் காண்பாயோ!
அவன் சேவடி நிழலில் சேர்ந்திட நானும்
வருவதைச் சொல்வாயோ!
ஓடிடும்போது என் குறை கேட்க
ஒரு நொடி நில்லாயோ!
உனைத் தேடிடும் வேளை நான் வரும்
சேதி அவனிடம் சொல்லாயோ!
நால்வகைப் பாடல் மல்லிகை முல்லை
நறுமணம் உன்னோடு!
வெறும்ஆசைகள் துன்பம் ஆயிரம்
இங்கே அடியவன் என்னோடு!
ஆழ்கடல் சூழ்ந்த ஆறுகள்
எல்லாம் இணைந்து ஒன்றாகும்!
நல்லதாய் மனம் கொண்ட வேலவன் முன்னால் அனைவரும் ஒன்றாகும்!
செந்தூர் செல்லும் தென்றல் காற்றே
முருகனைக் காண்பாயோ!
அவன் சேவடி நிழலில் சேர்ந்திட நானும்
வருவதைச் சொல்வாயோ!
முருகா சரணம்.











