• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சுக்ர வார சங்கடஹர சதுர்த்தி

siddharbhoomi by siddharbhoomi
June 17, 2022
in ஆன்மிகம்
0
சுக்ர வார சங்கடஹர சதுர்த்தி
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சுக்ர வார சங்கடஹர சதுர்த்தி

சுக்ர வார சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு பிடித்த இந்த நைவேத்தியத்தை செய்து தானமாக கொடுத்தால் உங்கள் வேண்டுதல் கட்டாயம் விரைவில் நிறைவேறும்.

விநாயகர் என்றாலே வேண்டிய வரங்களை உடனே கொடுப்பவர். பெரும்பாலானவர்களுக்கு

இஷ்ட தெய்வமாக இருப்பவர் ‘விக்னங்களை தீர்க்கும் விநாயகர்’, என்று கூட சொல்லலாம்.

வெறும் கைகளோடு, இரு கை கூப்பி கும்பிட்டு, மூன்று தோப்புக்கரணம் போட்டு, 3 பிள்ளையார்

கொட்டு வைத்துக் கொண்டு, நம்பிக்கையோடு வேண்டினாலே, வரங்களை வாரி வழங்குபவர்,

தும்பிக்கை விநாயகர். அதில் எந்த சந்தேகமும் இல்லை‌. இருப்பினும் சாஸ்திர முறைப்படி,

சதுர்த்தி வழிபாட்டை எப்படி மேற்கொள்ள வேண்டும்.?

17.06.2022 வெள்ளிக்கிழமை, சுக்ர வார சங்கட சதுர்த்தி வருகிறது. வீட்டில் வழிபாடு செய்ய

வேண்டுமென்றால், எப்போதும் போலவே முந்தையநாள் வீட்டை சுத்தம் செய்து கொள்ள

வேண்டும்.

சதுர்த்தி தினத்தன்று, காலையிலேயே எழுந்து, பூஜை அறையை அலங்காரம் செய்து, தீபமேற்றி விநாயகருக்கு மிகவும் பிடித்த வெள்ளெருக்கு மாலை, அருகம்புல், கிடைத்தால் அதை அணிவித்து, மனதார உங்களது விரதத்தை தொடங்கலாம்.

முடிந்தவர்கள், எதுவுமே சாப்பிடாமல், சதுர்த்தி தினத்தன்று மாலை 6 மணி வரை, விரதம் இருக்கலாம். முடியாதவர்கள், வெறும் பால் பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அதுவும் முடியாது என்றால் மூன்று வேளையும் வயிறார உணவு சாப்பிட்டும் விநாயகர் வழிபாட்டை செய்யலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை.

சதுர்த்தி தினத்தன்று மாலை விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்யலாம், சுண்டல் செய்யலாம். சில பேர் விநாயகருக்கு பிள்ளையார் உருண்டை என்று படைப்பார்கள்.

நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அதாவது பச்சரிசியை தண்ணீரில் ஊறவைத்து, தண்ணீர் ஊற்றி மாவாக அரைத்துக் கொள்வார்கள். இட்லி மாவு ஆட்டுவது போல கொஞ்சம் நறநறப்பாக அரைத்து கொள்ள வேண்டும். அரிசி மாவோடு, வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறி, கொழுக்கட்டை பிடிப்பது போலவே, பிள்ளையார் உருண்டை பிடித்து வைத்து வழிபாடு செய்வார்கள்.

பிரசாதம் செய்து வழிபடுவதில் ஒரு சூட்சம ரகசியம் உள்ளது. உங்களுக்கு நிறைவேறாத வேண்டுதல் ஏதாவது மனதில் இருந்தால், அதை விநாயகரிடம் சொல்லுங்கள் அப்படி சொல்லும்போது,

ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் விநாயகரின் பாதங்களில் வைத்து விடுங்கள். நீங்கள் வைக்கக்கூடிய அந்த வேண்டுதல் அடுத்த மஹா சங்கட சதுர்த்திக்குள், நிறைவேற வேண்டுமென்றும், வேண்டுதல் வையுங்கள்.

அதற்காக இந்த சங்கடஹர சதுர்த்திக்கு பிள்ளையார் உருண்டையை 11, 21, 51, 101 இப்படி கணக்கு என்பது உங்களுடைய இஷ்டம்தான். ஆனால் அது ஒற்றைப்படையில் வரவேண்டும்.

இவ்வாறாக பிள்ளையார் உருண்டைகளையோ அல்லது கொழுக்கட்டைகளாயோ பிடித்து விநாயகருக்கு முன்பு நைவேத்தியமாக படைத்து விடுங்கள். (அந்த மாவில், உருண்டைகளை பிடிக்கும் போதே உங்களது வேண்டுதலை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.)

உங்களது பூஜை முடிந்தவுடன் அந்த உருண்டைகளை, உங்கள் வீட்டில் அக்கம்பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விட வேண்டும். அவ்வளவு தான். (விநாயகரிடம் மனதார அந்த உருண்டைகளை நெய்வேதிமாக படைக்கும் போது, என்னுடைய வேண்டுதல்கள் அடுத்த வருடத்திற்குள் நிறைவேற்றி விட்டால்,

அடுத்த மகா சங்கட சதுர்த்திக்கும் இதேபோல் நெய்வேதியத்தை வைத்து விரதமிருந்து பூஜை செய்வதாக வேண்டிக் கொள்ளுங்கள். அந்த ஒரு ரூபாய் நாணயத்தை விநாயகர் அது கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.)

நீங்கள் எந்த வேண்டுதலை வைத்தீர்களோ, அந்த வேண்டுதலுக்கு, அடுத்த 11வது நாள் நிச்சயம் ஒரு வழி கிடைத்திருக்கும். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இப்படிப்பட்ட தோஷ நிவர்த்திக்கு கூட சதுர்த்தி விரதம் நல்ல பலனை கொடுக்கும்.

குறிப்பாக, புத்திக்கூர்மை இல்லாதவர்கள் இந்த சுக்ர வார சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டால், அவர்கள் தெளிவான புத்தியை அடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. நம்பிக்கையோடு இந்த சுக்ர வார சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டு தான் பாருங்களேன் பதினோராவது நாள் கட்டாயம் அதற்கான பலன் உங்கள் கைகளுக்கு வந்தே தீரும்.

Previous Post

நாகலிங்க பூ

Next Post

திருப்பட்டீச்சரத்தில்

Next Post
திருப்பட்டீச்சரத்தில்

திருப்பட்டீச்சரத்தில்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

மெய் ஞானிகள் மனிதரைத் தேடி வந்ததன் நோக்கம் என்ன?

மெய் ஞானிகள் மனிதரைத் தேடி வந்ததன் நோக்கம் என்ன?

December 16, 2025
அறிவுத்திருக்கோயில் கட்டப்படுவதன் நோக்கம் என்ன?

அறிவுத்திருக்கோயில் கட்டப்படுவதன் நோக்கம் என்ன?

December 15, 2025
போகாப்புனல்

போகாப்புனல்

December 14, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »