புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்.
இன்று ஒரு நாள் மட்டும் “யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்”
அன்றே “கணவனுடைய அம்மா அப்பா வந்தனர் ”
இருவரும் அவர்கள் வருவதை “ஜன்னல் வழியாக பார்த்துவிட்டனர்”
இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்,
“கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை”
ஆனால் , “ஒப்பந்தம் போட்டு விட்டதால்”
“அதை மீற மனமின்றி கதவை திறக்க வில்லை அவன்” அவர்கள் வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து, ” திரும்பி போய் விட்டனர்”
“மனைவியின் அம்மா அப்பா வந்தனர்” கதவை தட்டினார்கள்..!
“இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்”
ஆனால், ” மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது”..!
“என்னால் கதவை திறக்காமல் இருக்கமுடியாது ” என்று சொல்லி கதவை திறந்தாள்.
ஆனால் , “கணவன் ஒன்றும் சொல்ல வில்லை”..!
வருஷங்கள் உருண்டோடின..!
“இரண்டு ஆண் குழந்தை பிறந்தது”….!!
மூன்றாவதாக “பெண் குழந்தை பிறந்தது”..!
கணவன் ” பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில்”
பெரிய அளவில் செலவு செய்து
“அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான்”
அதற்கு மனைவி , “இரண்டு ஆண் குழந்தை பிறந்த போது”
“இவ்வளவு பெரிய அளவில் கொண்டாட வில்லை”
“பெண் குழந்தை பிறந்தவுடன்” ” இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்களே ஏன்”?
என்று கேட்டாள்
அதற்கு கணவன் “ரொம்ப நிதானமாக சொன்னான்”. “!எதிர்காலத்தில்
“எனக்காக கதவை திறக்க”. “ஓரு பெண் பிறந்துவிட்டாள் ! என்றான் கர்வத்துடன்..!










