தூத்துக்குடி மாநகரில் இன்று திங்கட்கிழமை காலை (03-8-2020 )
கபசுர குடிநீர் ஹோமியாபதி மாத்திரை (ஆர்செனிக்கம் ஆல்பம் 30C) மற்றும் முகக் கவசம் ஆகியவை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வணிகர்களின் பாதுகாவலர் த.வெள்ளையன் அவர்களின் ஆணையின் படி

தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பாக கொரனா வைரஸ் தாக்குதலைத் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் ஹோமியாபதி மாத்திரை (ஆர்செனிக்கம் ஆல்பம் 30C) மற்றும் முகக் கவசம் ஆகியவை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைப்பொதுச் செயலாளரும், மாவட்டத் தலைவருமான பழரசம் பா.விநாயக மூர்த்தி அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் த.பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ஆ.செந்தில் ஆறுமுகம், மாநகர பொருளாளர் மு.ராஜலிங்கம், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சொ.ராஜா,
728 Flights all over the world. Aurobookings.com
நகர இளைஞர் அணி அமைப்பாளர் பெ.வேல்முருகன், மத்திய சங்க மேலாளர் S.ஜெயப்பிரகாஷ் மற்றும் மத்திய சங்க நிர்வாகிகள், கிளைசங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த நிகழ்ச்சி கடந்த மாதம்(July) முதல் தொடங்கி தொடர்ச்சியாக ஏழாவது வாரமாக ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று காலை சமுக இடை வெளியுடன் நடை பெறும்.












