மார்ச் மாத மைத்ரேய முகூர்த்தம்
மார்ச் மாத மைத்ரேய முகூர்த்தம். கடன் சுமையிலிருந்து சுலபமாக வெளிவர இந்த நேரத்தை
யாரும் தவறவிடாதீர்கள்.
கடன் பிரச்சனையில் இருந்து சீக்கிரமே வெளி வருவதற்காக சித்தர்களால் நமக்கு
கொடுக்கப்பட்டுள்ள ஒரு அற்புதம் வாய்ந்த நேரம் தான் இந்த மைத்ரேய முகூர்த்த நேரம்.
மைத்ரேய முகூர்த்தத்தில் நாம் வாங்கிய கடனில் ஒரு சிறு தொகையை திருப்பிக் கொடுத்தால்
கூட, கடன் பிரச்சனை சீக்கிரத்திலேயே தீரும்.
இதுதான் இந்த மைத்ரேய முகூர்த்தத்தின் சிறப்பு. இந்த மார்ச் மாதத்தில் மைத்ரேய முகூர்த்தம்
எப்போது வருகிறது என்பதைப் பற்றிய தகவலையும்,
மார்ச் மாதம் வரக்கூடிய மைத்ரேய முகூர்த்தில் கடன் சீக்கிரம் அடைய என்னென்ன பரிகாரம்
செய்வது என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மார்ச் மாதம் முதல் மைத்ரேய முகூர்த்த தேதி:
மார்ச் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:05 லிருந்து காலை 11.05 வரை மைத்ரேய
முகூர்த்த நேரம் இருக்கின்றது.
இந்த மைத்திரேய முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமை வந்து இருப்பதால் சூரிய பகவானுக்கு உகந்த
நாளாக சொல்லப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் நாளைய தினம் வாஸ்து நாள்.
தேய்பிறை சதுர்த்தியும் சேர்ந்து வருகின்றது. ஆக மூன்று அற்புதம் வாய்ந்த சிறப்புகள் இந்த
நாளில் சேர்ந்து இருக்கிறது. இந்த நாளை தவறவிடாதீர்கள்.
எப்போதும் போல இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் பிரியாணி இலையை எடுத்து அதில்
உங்களுடைய கடன் தொகையை எழுதி, அந்த கடன் பிரச்சனை தீர தீர வேண்டும் என்று எழுதி,
அந்த பிரியாணி இலையை ஒரு கவரில் வைத்து, கடன் தொகையில் இருந்து ஒரு சிறு
தொகையையும் அந்த கவரில் வைத்து, பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
இப்படி செய்தால் ‘நீங்கள் யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்களோ அந்த நபருக்கு, மைத்ர
முகூர்த்த நேரத்தில் கடன் தொகையை திருப்பிக் கொடுத்ததாக அர்த்தம்.’
(இந்த பிரியாணி இலை பரிகாரத்தை மாதம் மாதம் வரக்கூடிய மைத்ரேய முகூர்த்தம் தேதியில், குறிப்பிட்ட அந்த நேரத்தில் கட்டாயம் செய்துவர உங்கள் கடன் பிரச்சனை சீக்கிரம் அடையும்.) கொஞ்சம் நிறைய பிரியாணி இலைகள் சேர்ந்த பின்பு எல்லா இலைகளையும் நெருப்பில் போட்டு பொசுக்கி, அந்த சாம்பலை தண்ணீரில் கரைத்துவிட வேண்டும்.
இந்த மைத்ரேய முகூர்த்தமானது ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்ந்து வந்திருப்பதால், பூஜை
அறையில் உங்களால் முடிந்த அளவு அரை கிலோ அல்லது ஒரு கிலோ கோதுமையை வாங்கி
வைத்து சூரிய பகவானை நினைத்து மனதார பிரார்த்தனை செய்து கொண்டு,
உங்களுடைய கடன் பிரச்சனை நெருப்போடு நெருப்பாகி போகவேண்டும் என்று வேண்டுதல்
வைத்து, அந்த கோதுமையை எடுத்து யாருக்கேனும் தானமாக கொடுக்கலாம்.
சதுர்த்தி தினம் என்பதால் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைக்கலாம். உங்களுடைய கடன்
தொகை சிதறி போக வேண்டும் என்று. செய்யக்கூடிய பரிகாரங்களை குறிப்பிட்ட இந்த
மைத்ரேய முகூர்த்தத்தில் செய்ய வேண்டும். அதாவது காலை 9:05 லிருந்து 11:05 மணிக்குள்.
வாஸ்து தினம் என்பதால் நீங்கள் புது வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தால், நிலம் வாங்க
வேண்டும் என்று நினைத்தால், வீட்டு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த
பூஜை அறையில் தீபத்தின் முன்பாக அமர்ந்து குறிப்பிட்ட இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில்
வாஸ்து பகவானை மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
எனக்கு சொந்த வீடு வேண்டும் என்று! சொந்த வீடு கூடிய விரைவில் அமைய இந்த பரிகாரம்
உங்களுக்கு துணையாக இருக்கும். இந்த பரிகாரத்தையும் மைத்திரேய முகூர்த்த நேரத்தில்
தான் செய்யவேண்டும்.
மார்ச் மாதம் இரண்டாவது மைத்ரேய முகூர்த்த தேதியும், செய்யவேண்டிய பரிகாரமும்:
மார்ச் மாதத்தில் 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9:38 லிருந்து 10:45 வரை மைத்ரேய
முகூர்த்த நேரம் இருக்கின்றது.
இந்த நாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாள். தேய்பிறை சஷ்டி திதி. வீட்டில் இருக்கக் கூடிய
முருகப்பெருமானுக்கு அரளி பூவால் அர்ச்சனை செய்து, மாதுளை பழத்தை நிவேதனமாக
வைத்து உங்களுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து
கொள்ளுங்கள்.
வேண்டுதலை முடித்து விட்டு அதன் பின்பு அந்த மாதுளம் பழத்தை வீட்டில் இருப்பவர்கள்
பிரசாதமாக சாப்பிட்டு விடலாம். அதன் பின்பு வழக்கம் போல குறிப்பிட்ட இந்த மாத்திரையை
முகூர்த்த நேரத்தில் பிரியாணி இலையை எடுத்து உங்களுடைய கடன் தொகையை எழுதி,
கடன் சீக்கிரம் தீரவேண்டும் என்று எழுதி,
ஒரு கவரில் போட்டு கடன் தொகையில் ஒரு சிறிய தொகையை அந்த கவருக்குள் வைத்து,
மடித்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். இவ்வளவு தாங்க. மார்ச் மாதம் மைத்ரேய
முகூர்த்த நேரத்தை யாரும் தவறவிடாதீர்கள். இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு
செய்பவர்களுக்கு நிச்சயமாக கைமேல் பலன் உண்டு.
பின்குறிப்பு: மேலே சொன்ன எல்லா பரிகாரத்தையும் உங்களால் செய்ய முடியவில்லை
என்றாலும் பரவாயில்லை. ஆனால் மைத்ரேய முகூர்த்த நேரத்தில் பிரியாணி இலை
பரிகாரத்தை மட்டும் தொடர்ந்து செய்து வர உங்கள் கடன் சீக்கிரமே படிப்படியாக குறையும்
என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.











