நாச்சியார்கோயில் ராகவப்பிள்ளை.
“தா தி தொம் நம் ஜம்- தா தி தொம்கிட ஜம்..” இந்த எளிய லயஸ்தானங்களை வைத்துக் கொண்டு விஸ்தாரமான ஜால வித்தை செய்வது தவில் வாத்தியத்தில் தான் சாத்தியம்.இந்த லயஞானிகளுக்கு அன்றையபெயர்,சேவுகக்காரர், நாயனக்காரர்,மேளக்காரர்.”அன்” விகுதியும் சாதாரணம்.இதை மாற்றி கச்சேரிமேடைகளில் தனி அந்தஸ்தைத் தேடித்தந்தவர்கள் பலர்.
இந்த வரிசையில் நாச்சியார்கோவில் ராகவப்பிள்ளை முக்கியமானவர்.திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை இவரது தேதி இல்லையென்றால் நிகழ்ச்சியைஒத்திவைத்தோ ரத்தோ செய்துவிடுவார் என்பர். நேர்த்தியான நாச்சியார்கோவில்தவில் நயம் அவ்வளவு பிரசித்தம். ஓர் அற்புதமான கானகோஷ்டி தமிழகத்தையே கலக்கிக்கொண்டிருந்தது.
திருமணங்கள் திருவிழாக்களில் நாதசுரக்கச்சேரிதான் முக்கிய அங்கம். பிரபல வித்வான்களை அழைத்து இசைக்கவைப்பது அந்தஸ்தின் அடையாளம் என்று கணக்கிட்டகாலம்.நீ உன் கல்யாணத்திற்கு மன்னார்குடி பரமசிவம்பிள்ளையவச்சே, திருக்காரவாசல் கோவாலுவை எங்க வீட்டு வளைகாப்புக்கு வக்கறேன் பார் கோட்டூர் ராஜரத்தினத்தையும் திருச்செங்காட்டான்குடி ருத்ராபதியையும் என்பது மாதிரியான சுவாரசியமான போட்டி.
சிவாஜிகணேசன் திருமணத்தில் காருகுறிச்சி அருணாசலம் நாச்சியார்கோயில் ராகவப்பிள்ளை,நீடாமங்கலம் சண்முகவடிவேல் ,கும்பகோணம் தங்கவேல்பிள்ளை,யாழ்ப்பாணம் தெட்சிணாமூர் த்திப்பிள்ளை,வலங்கைமான் சண்முகசுந்தரம் என இசைப்பிரவாகம்.
இதில் இரண்டுமணிநேரம் தனி ஆவர்த்தனம். கூடைகூடையாகக் கலைஞர்களுக்குக் கனகாபிஷேகமே நடந்ததாம். ராகவப்பிள்ளை தனி” முக்கால்மணிநேரம்.
அப்போது கிடிகிட்டி என்றொரு இசைக்கருவி.தில்லையாடி சீனிவாசம்பிள்ளை போன்ற சிலர் சிறப்பாக இருந்தனர்.கிட்ட்டத்தட்ட தவில். அசுரசத்தம்.தவிலும் சிரமமான வாத்யமாகவே இருந்தது. வார்பிடிக்கும் கடினமான வேலை. இது சரியாக இல்லாவிட்டால் நாதம் பலவீனமாக ஒலிக்கும். காலப்பரமாணம் சரியாக இருக்காது. அங்குமிங்கும் நகராமல் அப்படியே நிற்கும்.பின்னர் வார் பிடிக்கும் உபத்திரவம் மறைந்து ஸ்க்ரூ போட்டு முடுக்கும் பழக்கம் வந்தது.
இந்த வசதி சுநாதத்தைச் சிதைத்துவிடும் என்று ராகவப்பிள்ளை நினைத்தார்.தவிலுக்கு மைக்என்பதையே அவரால் ஏற்க முடியவில்லை.லயசுத்தம் பற்றிய கவலை.
தொப்பியின் சத்தம்வலந்தலை முழக்கத்தில் மூழ்கிவிடும்.பின்னால் ராகவப்பிள்ளை இந்த புதிய தவிலில் அற்புதங்கள் செய்தார். கொஞ்சம் பழமையான வித்வான்களுக்கு மாறுதல் பிரச்சனையே.
ஏழுஎட்டுமணி நேரக் கச்சேரிகள் ஒன்று ஒன்றரை மணியாகக் குறுகியபோது சிரமப்பட்டனர். மலைக்கோட்டை பஞ்சாமி சிட்டசுரத்தில்வல்லுநர்.”நிரவதி சுகாதா..”ரவிச்சந்திகாவாசித்தால் மேளவாத்யத்திற்கே தனிகுஷி வந்துவிடும்.
ராகவப்பிள்ளையின் விரல்கள் நர்த்தனமிடும்.திருநாசேச்வரம் சுப்புணி போன்றவர்கள் பழைய சங்கதிகளைப்பேண முயன்று நினைவுக்குக்கொண்டுவந்து சிறப்பிக்க முற்பட்டனர்.
இசையில் புதுசு பழசு என்பதில்லை.இதை ஏற்றுக்கொண்டு வார் பிடிப்பதை விட்டுவிட்டு மாறிய தவில் வாத்தியத்தைக்கையாள ஆரம்பித்தனர்.இன்னும் கூடுதலான நாதத்தைக் கொண்டுவந்தனர். ராகவப்பிள்ளையும் தம் விரல்களை மிக அற்புதமாக மாற்றிக்கொண்டார்.
கீரனூர் சகோதரர்கள், செம்பனார்கோயில் கோவிந்தசாமிப்பிள்ளை,திருவீழிமிழலை சுப்ரமணியப்பிள்ளை,
திருவாவடுதுறை ராஜரத்னம் பிள்ளை,திருவிடைமருதூர் வீருசாமிப்பிள்ளை, திருவாவடுதுறை நடராஜசுந்தரம், தருமபுரம் அபிராமிப்பிள்ளை, குழிக்கரை காளிதாஸ்பிள்ளை,வண்டிக்காரத்தெரு மணி, கோட்டூர் ராஜரத்தினம், காருக்குறிச்சி,திருமெய்ஞானம் ,நாமகிரிப்பேட்டை என எண்ணற்ற ஜாம்பவான்கள் கச்சேரிகளில் ராகவப்பிள்ளை கலக்குவார்.
பெரும்பள்ளம்வெங்கடேசன்,வலங்கைமான் சண்முகசுந்தரம் இலுப்பூர் நந்தகுமார்,நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் போன்ற மகா வித்வான்களும் ராகவப்பிள்ளை உடனிருந்தால் கச்சேரி சோபிக்கும் என்ற கருத்துடையவர்கள்.
திருவாளப்புத்தூர் பசுபதியிடமும் பின்னர் நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம பிள்ளையிடமும் பயின்றதுவீண்போகவிலலை. பக்கவாத்யம் பக்கவாத்யமாகவே இருக்கவேண்டும் என்பதில் பிள்ளைக்கு உடன்பாடு. நாதசுரத்தில் வித்வான் ஆலாபனைபண்ணிக்கொண்டிருக்கத் தவிலை
நயமாகத்தட்டிக் கொண்டிருப்பார்.பல்லவிஅனுபல்லவி சரணம்
வாசிக்கும்போது கிடைக்கும் இடைவெளியிலேயே இட்டுநிறப்பும்
அற்புதம் ராகவப்பிள்ளைக்கு அழகாக வாய்த்திருந்தது. கச்சேரி
ஆரம்பிக்கும் முன்னும் கச்சேரி முடிந்தபின்னும் வித்வான்களோடு
அடிக்கும் அரட்டைவெகு சுவாரசியமானது.குசும்பு, கேலி என ரசமாகும்
பொழுதுகள்.நல்ல ரசனைக்காரர்.
ஆரம்பத்தில் மிருதங்கம்கற்க ஆரம்பித்துதவிலுக்கு மாறி
அதில்கோலோச்சியவர் நாச்சியார்கோயில் ராகவப்பிள்ளை என்ற
மேதை.











