அலையூடெழுந்த நஞ்சினை நீ
அமரர்க்கென அன்று அவசரமாய்
அருந்துங்காலை அருகிருந்த
அன்னை தயவால் அதுமிடற்றில்
நிலையாய் நின்ற நிகழ்வினையும்
நெருப்பு விழியால் மன்மதனை
நீறாக்கிய போது உமை அவனை நிலைக்கச் செய்ததையும் நினைத்தால்
தலையோரைந்தும் திரு முகத்தில்
தாங்கும் விழிகள் மூன்றுமெனத்
தருக்கோடுலவும் சங்கர! நின்
தகைமையெல்லாம் உன் செயலால்
மலையேறாமல் காக்கவொரு
மாதுன் அருகே இருப்பதை நீ
மறவாதிருத்தல் நலமென்பேன்
மறுக்க உன்னால் இயன்றிடுமோ!











