ராகு கேதுவால் இனி உங்களுக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராது.
ராகு கேதுவால் இனி உங்களுக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராது. செவ்வாய்க்கிழமை இந்த வழிபாட்டை
மட்டும் செய்தால், துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்கள், எல்லாம் உங்களை விட்டு வெகு தூரம் சென்றுவிடும்.
🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍
ராகு கேது என்று சொன்ன உடனேயே நம்முடைய மனதில் ஒரு பயம். இவர்களால் நமக்கு ஏதாவது பிரச்சனை வந்து
விடுமோ என்று. இந்த ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆகவே ராகு
கேதுவை பார்த்து பயப்படுவதில் நிச்சயம் ஒரு அர்த்தம் இருக்கிறது.
சாஸ்திரப்படி ராகு தோஷம் இருந்தால், கேது தோஷம் இருந்தால், பணக்கஷ்டம் இருக்கும். திருமணம் நடக்காது.
திருமணம் ஆனவர்களுக்கு குடும்ப வாழ்க்கை சரியாக இருக்காது. கடன் சுமையால் கஷ்டப்படுவார்கள், இன்னும் பல
சிக்கல்களை கொடுக்கக்கூடிய கிரகங்கள் தான் ராகுவும் கேதுவும்.
🐍
இந்த இரண்டு கிரகங்களால் நமக்கு வரக்கூடிய கஷ்டங்களை எப்படி தவிர்ப்பது? இந்த கிரகங்களால் பெரிய அளவில் வரக்கூடிய கஷ்டங்களாக இருந்தாலும், அதை சிறிய அளவிலேயே தடுக்க ஜோதிடத்தில் நிறைய பரிகாரங்கள் உள்ளது.
அதிலிருந்து ஒரு எளிய பரிகாரம் இதோ உங்களுக்காக. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்ற திருப்திப்படும் அளவுக்கு நல்ல பலனை கொடுக்கக்கூடிய, ஒரு சிறப்பான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
🐍
ராகு கேது தோஷம் விலக பரிகாரம்:
🐍
இந்த பரிகாரம் செய்ய நீங்கள் ஒரு புற்றுக் கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். மக்கள் வழிபாடு செய்யக்கூடிய புற்றுக் கோவிலாக இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.
முதலில் புற்றுக் கோவிலுக்கு சென்றவுடன் கொஞ்சம் மஞ்சள் தண்ணீரை அந்த புற்றுக் கோவிலை சுற்றி தெளித்து விடவும். பிறகு அந்த புற்றுக்கு மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும். உங்களுக்கு எத்தனை வயது ஆகிறதோ, அத்தனை மஞ்சள் குங்குமம் அந்த புற்றுக்கு வைத்து விடுங்கள்.
🐍
பிறகு 16 முழம் கணக்கு வைத்துக் கொண்டு, மல்லிகை பூவை வாங்கி செல்லுங்கள். அந்த மல்லிகை பூவை புற்றுக் கோவிலை சுற்றி கட்டி விடுங்கள்.
பிறகு இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துவிட்டு உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை எல்லாம் சொல்லி மனதார பிரார்த்தனை வையுங்கள். பிரார்த்தனை நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.
🐍
பிறகு 16 முறை அந்த புற்றுக் கோவிலை வலம் வந்து வழிபாட்டை நிறைவு செய்து கொண்டால் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் அத்தனை துன்பங்களும் தீரும் என்பது நம்பிக்கை.
🐍
இது ஒரு பழமையான பரிகாரம். பெரிய பெரிய அளவில் பரிகாரங்கள் செய்தும் இந்த ராகு கேது தோஷத்தால் குடும்பத்தில் கஷ்டம் இருக்கிறது என்பவர்கள் நம்பிக்கையோடு ஒரு செவ்வாய் கிழமை, ஒருமுறை மட்டும் இதை மட்டும் செய்து பாருங்கள்.
உங்களுக்கு இருக்கும் எல்லா கஷ்டமும் எல்லா சுமையும் படிப்படியாக குறைய தொடங்கும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை செய்து பலன் பெறலாம்.











