1. மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், கவலைப்படாமல், தன் கடமைகளச் செய்யாமல் சிரித்துக் கொண்டிருப்பது – ஆச்சரியம்.
2. ஒரு நாளில் இவ்வுலகம் அழிந்து போகும் என்பதை அறிந்த மனிதன், உலகத்தின்மீது
மோகம் கொண்டிருப்பது – ஆச்சரியம்.
3. எந்த ஒரு செயலும் இறைவன் விதித்தபடியே நடக்கும் என்பதை அறிந்த மனிதன்,
கைநழுவிச் சென்றவற்றை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது – ஆச்சரியம்.
4. மறுமை வாழ்க்கைக்கான தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதை நம்புகின்ற மனிதன்,
அதனைப் பற்றி அக்கறையின்றி வாழ்ந்து கொண்டிருப்பது – ஆச்சரியம்.
5. நரக நெருப்பின் வேதனை பற்றி அறிந்த மனிதன், அது பற்றி சிந்திக்காமல் *தொடர்ந்தும் பாவம், தவறு செய்வது – ஆச்சரியம்.
6. இறைவன் ஒருவனே என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர வேறு எவருக்கோ வணக்கத்தை நிறை வேற்றுவது – ஆச்சரியம்.
7. நரகம், சொர்க்கத்தைப் பற்றி அறிந்த மனிதன், உலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிப்பது – ஆச்சரியம்.











