பித்ரு சாபம் நீங்க ஸ்ரீசூரிய பகவான் மந்திரம்.
ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லது ஏதேனும் ஒரு அமாவாசையன்று தொடங்க வேண்டும்.
பின் முடிந்தவரை ஞாயிறுதோறும் செய்துவர பூர்வ ஜென்ம பாவங்கள் தீரும். திருமணம், குழந்தை பாக்கியம் மற்றும் இதர சுபகாரியங்களில் தடை நீங்கி நினைத்த காரியங்கள் கை கூடி வரும்.
ஜாதகத்தில் பித்ரு சாபம் உடையவர்கள் இதை செய்ய பித்ரு சாபம் நீங்கி வாழ்வில் சுபகாரியங்கள் தொடர்ந்து நடக்கத்தொடங்கும்.
காலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடுவது பித்ரு தோஷத்திற்கு தகுந்த இறை பரிகாரமாகும்.
ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்!சஹசிவ சூரியாய!
வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா.











