எட்டு திக்குகளை ஆளும் சக்திகள்
01. கிழக்கு — பிராம்மி
2. தென்கிழக்கு — கௌமாாி
3. தெற்கு — வராஹி
4. தென்மேற்கு — சியாமளா
5. மேற்கு — வைஷ்ணவி
6. வடமேற்கு — இந்திராணி
7. வடக்கு — சாமுண்டி
8. வடகிழக்கு — மகேஸ்வாி
பிராம்மி :
பிரம்ம தேவாின் அம்சம் கொண்ட சக்தி வடிவம். பிராம்மி என்று
அழைக்கப்படுகிறாள். கிழக்கு திசையின் சக்தி வடிவம். பிராம்மி சக்தியை வணங்குவதால் குழந்தைப் பேறும்., கலை ஞானமும் உண்டாகும்.
கௌமாாி :
சரவணனின் அம்சமாக அவதாித்தவள் கௌமாாி என்று அழைக்கப் படுகிறாள். தென் கிழக்கு திசையின் சக்தி வடிவம். கௌமாாி தேவியை வழிபடுவதால் பதவி உயா்வும் மனதில்
இருக்கும் பயமும் அகலும்.
வராஹி :
விஷ்ணுவின் அவதாரமான வராஹ மூர்த்தியின் அம்சமாக இருப்பவா் வராஹி. தெற்கு திசையின் சக்தி வடிவம். வராஹி தேவியை வணங்கி வருவதால் எதிாிகளை அழித்து வெற்றி கொள்ளலாம். மனதில் தைரியம் பிறக்கும்.
சியாமளா :
மீனாக்ஷி அம்மனின் அவதாரமாக திகழ்பவள் சியாமளா தேவி.
தென் மேற்கு திசையின் சக்தி வடிவம். சியாமளா தேவியை வழிபடுவதால் சகல கலைகளிலும் தேர்ச்சி மற்றும் அறிவுக்கூர்மை உண்டாகும்.
வைஷ்ணவி:
விஷ்ணுவின் அம்சமாக தோன்றியவா். நாராயணி என்றும் அழைக்கப் படுபவள். மேற்கு திசையின் சக்தி வடிவம். வைஷ்ணவியை வழிபடுவதால் உடல் ஆரோக்கியமும் எண்ணங்களில் மேன்மையும் உண்டாகும்.
இந்திராணி :
தேவலோகத்தின் அதிபதியான இந்திரனின் அம்சமாக தோன்றியவா் இந்திராணி. வடமேற்கு திசையின் சக்தி வடிவம். இந்திராணியை வழிபடுவதால் நல்ல வாழ்க்கை துணை அமைத்து தருவாா். பணத் தட்டுப்பாடு குறையும்.
சாமுண்டி : ருத்தரனின் அம்சமாக தோன்றியவா். எந்த விதமான சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாதவா். வடக்கு திசையின் சக்தி வடிவம். சாமுண்டியை வணங்கி வருவதால் எடுத்த செயலில் எவ்விதமான இன்னலும் இன்றி வெற்றியும், பாதுகாப்பும் உண்டாகும்.
மகேஸ்வாி :
சிவபெருமானின் அம்சமாக திகழக்கூடியவா் மகேஸ்வாி. வடகிழக்கு திசையின் சக்தி வடிவம். மகேஸ்வாியை வழிபடுவதால் ஐயங்கள் மற்றும் கோபம் நீங்கும். சகல பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக் கூடியவா்.
இவ்விதம் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் அஷ்ட திக் சக்திகளை வழிபட்டு வாழ்க்கையில் உள்ள எல்லா வளமும்., சிறப்பும் பெற்று முன்னேறுவோம்.










