கருங்காலி மரத்தின் சிறப்பு பற்றி விரிவாக
படத்தில் இருக்கும் மரம்தான் #கருங்காலி_மரம் இந்த மரம் மிகவும் அபூர்வமான
மரங்களில் ஒன்று. இந்த மரத்தின் ஆற்றல் சக்தியானது ஓரு கிலோமீட்டர்
சுற்றளவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த மரத்திற்கு மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம், இந்த
மரத்துண்டுகளை #கோவில்_குடமுழுக்கின் போது கலசத்தை நிலை நிறுத்த
பயன்படுத்துவார்கள்.
அது பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றலை ஈர்த்து கருவறையில் உள்ள விக்ரகத்தின்
அடியில் சில தகடுகள் பதிகப்பட்டு இருக்கும் அந்த சக்தியுடன் கலந்து நமக்கு
அபரிதமான சக்தியை வழங்கும் இது பழங்கால கோயில்களில் உணரலாம் .
இந்த மரத்திற்கு #negative_energy அழிக்கும் ஆற்றல் உள்ளது, அதனாலே இந்த
மரத்தல் ஆனா #சிற்பங்கள் செய்து வீட்டுக்குள் வைப்பார்கள்.
இந்த மரத்திற்கு வீட்டில் உள்ள நெகடிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்தி உண்டு.
அக்காலத்தில் பெரும் செல்வந்தர்கள் #walking_stick கருங்காலி மரத்தால் ஆனது,
கெட்ட ஆத்மா தன்னை பித்தொடராமல் இருக்க, தானியங்கள் குத்தும்
உலக்கையும் இந்த மரத்தால் மட்டுமே செய்யப்படவேண்டும்…
குழந்தைகள் பல் வளரும் பருவத்தில் இந்த மரத்தால் ஆனா கட்டையில் தான்
மரப்பாச்சி பொம்மைகள் செய்வார்கள்
(1) காற்று, கருப்பு அண்டாமல் இருக்க,
சிலருக்கு பக்கவாதம் ஒரு கை கால் செயல் திறன் குறைவாக இருந்தால், கை
நடுக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த கருங்காலி கட்டைகளை கையில்
வைத்துக் கொண்டு இந்த மர நிழலில் அடிக்கடி அமர்ந்து கொண்டு இந்த கட்டை
ஊற வைத்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் பிரச்சினை சரியாகும்.
இந்த மரத்தில் தான் உலக்கை செய்வார்கள். உறுதியாக இருக்க பிரபஞ்ச ஆற்றல்
உலக்கை வழியாக தானியங்களில் இறங்கி அந்த தானியங்களை நாம்
உட்கொள்ளும் போது மிகுந்த ஆற்றல் நமக்கு கிடைக்கும்.
வயதுக்கு வந்த பெண்களின் அருகே இந்த உலக்கையை போட்டு வைப்பார்கள்.
சுடுகாடு சென்று வந்தவுடன் இந்த உலக்கையை தாண்டி வர சொல்வார்கள்
எதற்காக என்றால் கெட்ட சக்திகளை நம்மை விட்டு அகற்ற தான்.
அந்த காலத்தில் வீடு சொத்து இழந்தவர்கள் கருங்காலி மரத்தை வெட்டி கொண்டு
வந்து காய போட்டு பின் நல்ல நாளில் குல தெய்வ கோவிலுக்கு சென்று அந்த
கட்டைகளை எரித்து பொங்கல் வைத்து சாமிக்கு படையல் போடுவார்கள்.
பின்பு மனதார வேண்டி கொண்டு அந்த அடுப்பில் உள்ள சாம்பலை எடுத்து வந்து
வீட்டில் பூஜை அறையில் செம்பு கலசத்தில் வைத்து தினமும் பூஜை செய்து
வணங்கி வந்தால், இழந்த சொத்துக்கள் மரியாதை மீண்டும் கிடைக்கும் என்று
சொல்லப்படுகிறது.
அதே மாதிரி குல தெய்வத்தின் அருள் கிடைக்க வில்லை என்பவர் இதே போல்
பொங்கல் வைத்தால் அதற்கு ஒரே ஒரு சின்ன கருங்காலி கட்டை போட்டால்
போதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கி வந்தால் குல தெய்வத்தின்
அருள் முழுமையாக கிடைக்கும்.
நன்கு படிக்காத குழந்தைகள் காலை வேலையில் படிக்கும் போது இந்த குச்சி
மூலம் தலையில் மூன்று முறை தட்டி வரவேண்டும். ஒன்பது நாட்களில்
குழந்தைகள் படிப்பில் மாற்றம் தெரியும். மெதுவாக குச்சியை தலையில் தொட்டு
எடுக்க வேண்டும்.
ஒரு காலத்தில் பள்ளி கூடத்தில் இந்த குச்சியை தான் அடிக்க பயன் படுத்தினார்கள்,
வாத்தியார்கள் காலப்போக்கில் குச்சி மாறி விட்டது.
இந்த மரத்தில் தான் ஆதி காலத்தில் கடல் கடந்து செல்லும் படகுகளில் பாய்மரம்
கட்டுவார்கள்.
இடி மின்னல் செங்குத்தான இந்த மரத்தில் இறங்கி கடலுக்கு அடியில் சென்று
விடும் அதற்கு தான்.
வீதிகளில் ஜோசியம் குறி சொல்பவர் இந்த மர குச்சியை தான் நம் முன்னே நீட்டி
கைகளில் வைத்தும் நம் மன எண்ணங்களை ஈர்ப்பார்கள். இப்போது உங்களுக்கு
ஓரளவு இந்த மரத்தை பற்றி புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த கட்டைகளை எரித்து அந்த சாம்பலை பேய் பிடித்து விட்டது என்கிறார்களே…
அது அந்த மன சிதைவு நோய்க்கு நெற்றியில் விபூதி போல பூசி வர நல்ல மாற்றம்
தெரியும்.
இந்த மரம் மிதுனம் மேஷம் விருச்சிகம் ராசிகள் மிருகசீரிஷம் அஸ்வினி
அனுஷம் பரணி விசாகம் நட்சத்திரத்தில் கேட்டை பிறந்தவர்களுக்கு, இது உகந்த
மரம் இது.
இந்த மரம் செவ்வாய் கிரகத்தின் நற்குணங்களை மற்றும் பெற்றவை, இந்த
மரத்தின் நிழலில் அமர்வதே நன்மை தரும்.
இந்த மரத்தை வீடுகளில் வளர்க்கலாம். கோயில்களில் நட்டு வைக்கலாம். மிக
நல்லது மரம் வளர வளர உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
முருகனுக்கு மிக உகந்த மரம். ஆக மொத்தம் கருங்காலி இருக்கும் இடத்தில்
தெய்வ சக்தி இருக்கும் நல்ல தரமான உன்மையான கருங்காலி மாலைகள்
குச்சிகள் விக்ரகங்கள் திரிசூலங்கள் வாங்கி வைக்கலாம் பண வரவு செல்வ வளம்
அதிகரிக்கும்.
இதில் பல விதமான ரகசிய விடயங்கள் உள்ளது. சொல்ல நேரம் இல்லை, இதில்
இரண்டு வகை உண்டு.
மரங்களிடம் இருந்தே மனிதன் ஆற்றலை பெறுகிறான், அதை ஏனோ மனிதன்
உணருவது இல்லை,
நாட்டு மரங்களை தேடி தேடி விதையுங்கள், அது உன்னினத்தை காக்கும்.
(மனிதனை விட மேலானவைகள் மரங்கள்)











