ஒரு துறவியிடம் ஒரு மன்னன் சென்று, “எனக்கு சாத்தானையும், கடவுளையும் காட்ட முடியுமா”, என்று கேட்டான்.
துறவி, “உனக்கா? நீ ஒரு மிருகம், மற்றவர் வரியாக கொடுக்கும் பணத்தில் கொழிப்பவன், பிறரை துன்புறுத்தி வாழ்பவன், உனக்கு எதுவும் புரியாது, இங்கிருந்து போய் விடு”, என்று சொன்னார்.
மன்னனுக்கு வந்ததே கோபம், “நீ செத்தாய்” என்று கத்தி கொண்டே தன் வாளை எடுத்து துறவியை வெட்ட முற்பட்டான்.
துறவி, மிக அமைதியாக, “இதோ, இப்பொழுது நீ தான் சாத்தான்”, என்று கூறினார்.
மன்னன் தன் தவறை உணர்ந்து, வாளை தாழ்த்தி, அவர் முன் மண்டியிட்டு மன்னிப்பு வேண்டினான்.
துறவி, “இதோ, இப்பொழுது நீ தான் கடவுள்!” என்று புன்முறுவளோடு சொன்னார்.
சாத்தானும், கடவுளும் நமக்குள்ளே தான் இருக்கிறார்கள், தேடுங்கள், கிடைத்து விடும் என்றார்.











