நான் கூறுவதை நீ சரியாக கவனித்து கேட்டால் அவை உனக்கும் நடக்கும்
ஒரு நாள் கௌதம புத்தர் ஒரு காட்டின் வழியாக சென்று கொண்டிருந்தார். அது இலையுதிர் காலம் என்பதால் தரையில் காய்ந்த இலைகள் அடர்த்தியாக விழுந்து கிடந்தன.
அவர் தனிமையில் இருப்பதைக் கண்ட அவரது தலைமைச் சீடராகிய ஆனந்தர் புத்தரிடம், “இந்தக் கேள்வி எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் அறிந்த எல்லாவற்றையும் எங்களுக்கு கூறிவிட்டீர்களா?” என்று கேட்டார்.
புத்தர் கீழே குனிந்தார், கைநிறைய காய்ந்த சருகுகளை எடுத்தார். அந்தச் சருகுகளை ஆனந்தாவிடம் காட்டி. “நான் இந்த அளவுக்கு மட்டுமே கூறி இருக்கிறேன் நான் கூறாதது இந்த காட்டில் எவ்வளவு காய்ந்த சருகுகள் இருக்குமோ, அவ்வளவாகும்,” என்றனர்.
ஆனால் நான் அந்த அளவுக்கு கஞ்சத்தனத்தோடு இருக்க விரும்பவில்லை. அந்த பாதையில் நிகழ்கிற எல்லாவற்றையும் விலாவாரியாக உனக்கு கூற விரும்புகிறேன். இதுதான் நேரம் கௌதம புத்தர் மறைந்து இருபது நூற்றாண்டுகள் ஆகிவிட்டது இப்போது மனிதனின் தன்னுணர்வானது அதிக முதிர்ச்சி அடைந்துள்ளது.
அது ஒரு கையளவு காய்ந்த சருகுகளால் திருப்தி அடையாது. நான் உனக்கு அந்த முழு தோட்டத்தையும் கொடுக்கிறேன்; அதனால் தான் உனக்கு வெகு தொலைவில் இருக்கின்ற ஒருவேளை உனக்கு நடக்காமல் போய் விடுமோ என்று நீ நினைக்கிற அநேக விஷயங்களைப் பற்றி நான் பேசுகிறேன். ஆனால் நான் கூறுவதை நீ சரியாக கவனித்து கேட்டால் அவை உனக்கும் நடக்கும் என்று நான் உனக்கு கூறுகிறேன அது எனக்கு நிகழ்ந்ததனால் உனக்கும் அது ஏன் நிகழக் கூடாது என்பதற்கு அங்கே எந்தவிதமான காரணமும் கிடையாது.
மக்கள் விசித்திரமானவாகளாக இருக்கின்றனர். அவர்கள் மிகப் பெரிய தத்துவங்களையும், கொள்கைகளையும் விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் ஒரு மிகப் பெரிய வாழ்க்கையை விரும்புவதில்லை. மிகப் பெரிய தத்துவக் கருத்துகளைப் பேசி அவர்கள் சமாதானம் அடைய விரும்புகின்றனர்











