சொல்பேச்சு கேட்காத பிள்ளைகளை திருத்த செல்ல வேண்டிய கோவில்.
சொல் பேச்சைக் கேட்காத மகன் மட்டும் தானா. சொல் பேச்சு கேட்காத மகள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
என்ன செய்வது. இப்போதெல்லாம் பிள்ளைகள் பெற்றவர்களை எதிர்த்து பேசுவதை நாகரீகமாக மாற்றி விட்டார்கள்.
உங்கள் பேச்சை காது கொடுத்து கேட்காத மகன் மகள் யார் உங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை
நீங்கள் செய்யலாம்.
Tuticorin to chennai Daily Special Offer Cheap Flight ticket
இந்த கோவிலுக்கு நீங்கள் செல்லலாம். இப்படியே விட்டால் என்னுடைய குழந்தை தடம் மாறி போய்விடும்.
சேர்க்கை சரியில்லை, பழக்க வழக்கங்கள் சரியில்லை, படிப்பில் ஆர்வம் இல்லை, தாய் தந்தை சொல்லும் நல்லதை
காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறாங்க, இந்த பிரச்சனையில் இருந்து எல்லாம் தப்பிக்க ஆன்மீகம் சொல்லும் ஒரு
எளிய வழிபாட்டு முறை இதோ உங்களுக்காக.
சொல் பேச்சு கேட்காத பிள்ளைகளை சரிசெய்ய செல்ல வேண்டிய கோவில்
திருச்சியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உறையூர் வெக்காளியம்மன் கோவில் இருக்கின்றது.
இந்த கோவிலுக்கு ஒரு முறை சொல்பேச்சு கேட்காத உங்களுடைய பிள்ளையை அழைத்துச் செல்லவும்.
வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை இந்த கோவிலுக்கு செல்வது சிறப்பு. மற்ற கிழமைகளில் சென்றாலும்
தவறு கிடையாது.
Chennai to Tuticorin Daily Special Offer Cheap Flight ticket
உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது இந்த கோவிலுக்கு செல்லுங்கள். உங்களது பிள்ளைகள் கையால் வெக்காளி அம்மனுக்கு இரண்டு விலக்கில் நெய் தீபம் ஏற்றி வையுங்கள். பிறகு அந்த கோவிலில் சிறிது நேரம் நேரத்தை கழிக்க வேண்டும். அதாவது அந்த கோவிலில் அமர்ந்து 1 மணி நேரமோ அல்லது 45 நிமிடமோ உங்களுடைய பிள்ளைகளை அந்த கோவிலில் சிறிது நேரம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு வீட்டிற்கு திரும்பும் போது உங்களுடைய பிள்ளைகளின் கைகளால் இல்லாதவர்களுக்கு சாப்பாடு வாங்கி தானமாக கொடுங்கள். இந்த பரிகாரத்தை ஒரே ஒரு முறை செய்தாலே உங்களுடைய பிள்ளைகளின் மனநிலையில் நல்ல மாற்றம் தெரியும். அம்மா அப்பா சொல்பேச்சு கேட்காமல் தடம் மாறி செல்லக்கூடிய சூழ்நிலையில் இருக்கும் பிள்ளை கூட நிச்சயம் நல்வழியில் செல்ல தொடங்கிவிடும்.
Zurich to Berlin Daily Special Offer Cheap Flight ticket
இந்த கோவில் இதற்கு மட்டும் சிறப்பானது கிடையாது. ஏவல் பில்லி சூனியம் எதிரி தொல்லை போன்ற பிரச்சனைகளை சரி செய்யவும் கோர்ட் கேல்ஸ் வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கவும், சிக்கலான பிரச்சனைகளிலிருந்து வெளிவரவும் இந்த அம்பாளை நாம் வழிபாடு செய்யலாம்.
திருமணம் ஆகாத பிள்ளைகளை இந்த கோவிலுக்கு அழைத்துச் சென்றால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை பேரு இல்லாதவர்கள் ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று வந்தால் குழந்தை பேரு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. உங்கள் மனதில் இருக்கும் கஷ்டங்களை நிறைவேறாத வேண்டுதல்களை ஒரு பேப்பரில் எழுதி சுருட்டி, மஞ்சள் நூலால் கட்டி, அந்த கோவிலில் இருக்கும் திருசூலத்தில் கட்டி வைக்க வேண்டும்.
Berlin to Zurich Daily Special Offer Cheap Flight ticket
இதை செய்தால் உங்கள் பிரார்த்தனை பலிக்கும் என்பதும் ஒரு நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இந்த அம்பாளுக்கு மேற்கூரை இருக்காது. இந்த உலகத்தையே பாதுகாக்க கூடிய அம்பாள், நீங்கள் சென்று வழிபாடு செய்தால், உங்கள் குடும்பத்தை பாதுகாக்காமல் விட்டுவிடுவாளா என்ன.











