தேய்பிறை பஞ்சமியில் வாராஹி அம்மனுக்கு வழிபடுங்கள்.
தேய்பிறை பஞ்சமியில் வாராஹி அம்மனுக்கு இந்த மாலையை அணிவித்து
வழிபடுங்கள், இந்த வழிபாட்டின் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.
சப்த கன்னியர்களின் ஒருவரான வாராஹி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த
தெய்வம். இந்த அம்மனின் முன் நின்று மனம் உருகி நாம் கண்ணீர் சிந்தி என்ன
வேண்டுதல் வைத்தாலும் உடனே நம் வேண்டுதலுக்கு செவி சாய்த்து நம்மை
காப்பவர் இந்த வாராஹி அம்மன்.
அப்படியான இந்த வாராஹி அம்மனுக்கு உகந்த நாளான இந்த பஞ்சமி திதியில்
எப்படி வழிபட்டால் நம் வீட்டில் தன ஆகர்ஷணத்தை பெறலாம் என்பதையும்,
வழிபடும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த ஆன்மீகம் குறித்த
பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம் துயர் தீர்க்க கூப்பிட்ட நேரத்தில் வந்து நிற்கும் தெய்வங்களில் இந்த வாராஹி அம்மனுக்கு நிகர் இவரே தான். வாராஹி அம்மனை
நினைத்து நாம் வேண்டும் எந்த வேண்டுதலும் வீணாக போகாது.
இந்த அம்மனை பஞ்சமி திதியில் வழிபடும் போது வழிப்பாட்டிற்கான பலன் கூடுதலாகவே பெற முடியும். இவருக்கு பஞ்சமி திதியில்
கருமஞ்சளை கொண்டு மாலை அணிவித்து வணங்கும் போது நம் வீட்டிற்கு தன ஆகர்சனம் தேடி வரும் என்று
சொல்லப்பட்டிருக்கிறது.
பண வரவுக்கு வாராஹி வழிபாடு
இந்த வழிபாட்டிற்கு நம் வீட்டில் வாராஹி அம்மன் படம் இருக்க வேண்டும். வாராஹி அம்மன் விக்ரகங்களை வைத்து வழிபடுவதாக இருந்தால், அவை ஒரு அங்குலம் மட்டும் இருந்தால் வைத்து வழிபடலாம், பெரிய விக்கிரகங்களை வைக்கக் கூடாது.
இப்படி உங்கள் வீட்டில் திருவுருவப்படம், விக்கிரகம் எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு இன்றைய பஞ்சமி திதியில் மாலை ஆறு மணிக்கு மேல் இந்த கருமஞ்சள் மாலையை அணிவித்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். வாராஹி அம்மனுக்கு என்று தனியாக ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்து வழிபாடு செய்து கொள்ளுங்கள்.
வழிபாடு செய்த கருமஞ்சள் மாலையானது வாராஹி அம்மன் படத்திலே இருக்கலாம் ஒன்றும் தவறில்லை. கருமஞ்சள் காய்ந்த பிறகு நீங்கள் வேறு கருமஞ்சள் மாலையை மாற்றி போட்டுக் கொள்ளுங்கள். அதையும் இது போல பஞ்சமி திதியில் தான் செய்ய வேண்டும்.
இந்த காய்ந்த கருமஞ்சளை உங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடத்திலோ, வியாபாரம் செய்பவராக இருந்தால் பணம் புழங்கும் இடத்தில் வைத்தால் தன ஆகர்ஷணத்தை இந்த கருமஞ்சள் ஈர்த்து தரும். கருமஞ்சலானது காய காய அதற்கான சக்தி கூடிக் கொண்டே செல்லும். பணத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்த பொருள்களில் கருமஞ்சளுக்கு நிகர் இந்த கருமஞ்சள் தான்.
எனவே இது இருக்கும் இடத்தில் பணப்புழக்கம் ஆனது அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த வழிபாடு செய்யும் போது நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஒன்று இந்த வழிபாடு செய்யும் வீட்டில் பொய் என்பது அறவே இருக்கக் கூடாது.
வாராஹி அம்மனை வழிபடும் வீட்டில் பொய்யானது இருந்தால் இந்த வழிபாடு நமக்கு நன்மையை தருவதற்கு பதிலாக நிச்சயம் தீமையை விளைவிக்கும் என்று சொல்லப்படுகிறது.
பொதுவாகவே வீட்டில் பொய் பேசிக் கொண்டு இருந்தால் அந்த வீட்டில் தரித்திரமானது குடி கொண்டிருக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
வாராஹி அம்மன் போன்ற உக்கிர தெய்வங்களை வைத்து வணங்கும் போது உண்மையான மனதோடும், தூய்மையான எண்ணத்தோடும் வணங்கும் போது உங்களின் வேண்டுதலுக்கான பலன் இரட்டிப்பாகவே கிடைக்கும்.
இந்த வாராஹி அம்மனை வழிபாட்டை நல்ல முறையில் செய்து அவர்களின் அருளையும், ஆசீர்வாதத்தையும் பெற்று உங்களின் தன ஆகர்சனத்தை பெருக்கி நல்ல முறையில் வளமான வாழ்வை வாழுங்கள்.











