வீட்டில் ஐஸ்வர்யம் பெருக விளக்கேற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
*தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே*
ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. காலை மாலை இருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறேன்.
அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் விளக்கேற்ற சர்வமங்கள யோகத்தை தரும்.
மாலை 6 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபட நல்ல வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும்.
காலை விளக்கேற்றும்போது உடல், மனம் சுத்தத்துடன், வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.
மாலையில் விளக்கேற்றும்போது, வாசலில் தண்ணீர் தெளித்துக்கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.
காலை, மாலை விளக்கேற்றும்போது கொல்லைப்புறக் கதவைச் சாத்திடவேண்டும்.
கொலைப்புறக்கதவு இல்லாதவர்கள் பின் பக்கம் உள்ள ஜன்னல் கதவைச் சாத்தியே விளக்கேற்ற வேண்டும்.
விளக்கேற்றும்போது, விளக்கிற்கு பால், கற்கண்டு, நிவேதனம் வைத்து வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிட்டும்.
விளக்கேற்றிய பிறகு தலை சீவக்கூடாது.
வீட்டைப் பெருக்கிக் கூட்டக்கூடாது.
சுமங்கலிப் பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது.
விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.
விளக்கேற்றியவுடன் தலைக்கு குளிக்கக் கூடாது.
விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது.
விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது.
விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசியை யாருக்கும் கடனாகவோ தானமாகவோ கொடுக்கக்கூடாது
விளக்கினை கிழக்கு, வடக்கு திசை நோக்கி ஏற்றலாம்.
மேற்கும் தெற்கும்
விளக்கு ஏற்ற சரியான திசை அல்ல.
இறந்தவர்களுக்கு கர்மா செய்யும் போது குறிப்பிட்ட அந்த நாட்களில் மட்டும் தான் தெற்கு திசையை நோக்கி விளக்கினை ஏற்ற வேண்டும்.
மற்றபடி யார் கூறினாலும் தெற்கு திசையை நோக்கி நம் வீட்டில் விளக்கு ஏற்றுக் கூடாது.
மேலும் பருத்தியால் ஆன பஞ்சுத்திரி அல்லது தாமரை தண்டு திரி கொண்டு வீட்டிலும் கோவில்களிலும் விளக்கு ஏற்றலாம்.
தாமரை தண்டினாலான திரியில் ஏற்றும் விளக்கிற்கு அதிக பலன் உண்டு.
திரியானது ஒன்று, இரண்டு, மூன்று என்ற எந்த கணக்கில் வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளலாம்.
தீபம் அணையாமல் எரியும் அளவிற்கு திரியினை போடவேண்டும்.
வீட்டில் விளக்கேற்றும் போது சுத்தமான பசு நெய், நல்லெண்ணெய் இவைகளை கொண்டு நம் வீட்டில் விளக்கினை ஏற்றலாம்.
இதனால் நமக்கு கிடைக்கும் பலன் நன்மையாக தான் இருக்கும்.
ஆனால் நெய்யையும் நல்லெண்ணையையும் கலந்து விளக்கினை ஏற்றக்கூடாது.
மேலும் கூட்டு எண்ணெய், கடலை எண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய் இவற்றில் கட்டாயம் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது.
நம் வீட்டில் சாந்தமான தெய்வங்களை மட்டும் வைத்து வழிபடுகின்றோம்.
ஆனால் ஆலயங்களில் சாந்தமான தெய்வம், உக்கிரமான தெய்வம் இரண்டையும் சேர்த்து வழிபடுவோம்.
ஆகையால்ஆலயங்களில் விளக்கு ஏற்றுவதில் சிறு வேறுபாடு உள்ளது.
ஆலயங்களில் நெய், நல்லெண்ணெய், இலுப்பெண்ணை
இவைகளில் விளக்கு ஏற்றலாம்.
இலுப்பை எண்ணெய் கசப்புத் தன்மை உடையது.
இந்த எண்ணெயில் கோவில்களில் விளக்கு
ஏற்றும் போது நம்மீது மற்றவர்களுக்கு உள்ள கசப்புகளும், வெறுப்புகளும் நீங்கி, அன்பும் பரிவும் ஏற்படும்.
மேற்கு நோக்கி உள்ள சிவாலயங்களில் மாலை நேரத்தில் பிரதோஷ தினத்தன்று இலுப்பெண்ணெய்யில் விளக்கேற்றி வந்தால், கணவன் மனைவியாக இருந்தாலும், அண்ணன் தம்பியாக இருந்தாலும், தந்தை பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களுக்கு இடையேயான மனக்கசப்புகள் விலகும்.
தினம்தோறும் நம் வீட்டில் ஒரு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் போதுமானது.
அம்பாளையும், அல்லது ஸ்ரீ சக்கரத்தை வீட்டில் வைத்து பூஜை செய்பவர்கள், பூஜை அறையின் வலது புறம் பசு நெய் தீபமும் இடது புறம் நல்லெண்ணை தீபம் ஏற்றி வைக்க வேண்டும்
பெண்கள் தலைமுடியை விரித்தப்படி தலைவிரி கோலமாக இருக்கக்கூடாது.
தலை சீவி, பொட்டு வைத்துதான் விளக்கேற்ற வேண்டும்.
விளக்கேற்றியபின் வீடு பெருக்கக்கூடாது.
வீடு பெருக்கும்போது செல்வத்தையும் சேர்த்து பெருக்குவது போலாகும்.











