ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு, சொல்ல வேண்டாம்.
மாதாவை ஒருநாளும். மறக்க வேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்.
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்.
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்.
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
மனம்போன போக்கெல்லாம். போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்












