அகிலன் – அகிலன் (Akilan) என்று அறியப்படும் பி. வி.அகிலாண்டம் அவர்களின் நினைவு நாள் சனவரி 31 (1988).

தனது பெயரை அகிலன் என்ற புனைபெயர் ஆக்கிக் கொண்ட இவர் ஒர் தனித்துவமான தமிழ் எழுத்தாளர் ஆவார்.
எதார்த்தம் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்கு பெயர் பெற்றவராக . அகிலன் அறியப்படுகிறார்.
இவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார்.
சிறப்புப் பெற்ற புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக இவருக்கு பல முகங்கள் உண்டு.
அகிலன்
1922 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் தேதி எங்கள் கருரில் பிறந்தவர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூர் இவரின் பூர்வீக ஊர் வளர்ந்தது தொடக்கக் கல்வி கற்றதும் பெருங்காளூரில் தான்.
அங்கு இவரது தந்தை வைத்தியலிங்கம் பிள்ளை ஒரு கணக்கு அலுவலர் ஆவார். தன்னுடைய ஒரே மகன் அகிலன் மீது அவர் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார்.
எதிர்பாராவிதமாக அகிலன் தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையை இழக்க நேர்ந்தது. ஆனால் அவரது தாயார் அமிர்தம்மாள் ஓர் அன்பான அன்னையாகத் தன் மகனை ஒரு எழுத்தாளராக அவர் வடிவமைத்தார்.
பள்ளி நாட்களில் அகிலன் காந்திய தத்துவத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார், சுதந்திரப் போராட்டத்தில் களமிறங்க வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டையில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தியாகம் செய்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அவர் இரயில்வே அஞ்சல் சேவை பிரிவில் பணியில் சேர்ந்தார்,
முழு நேர எழுத்தாளர் ஆவதன் பொருட்டு, தனது பணியைத் துறந்தார்
முழுநேர எழுத்தாளராக எழுத்துப் பணியில் ஈடுபட்டார். இவர் எழுதிய கதைகள் பெரும்பாலும் கலைமகள் இதழில் வெளியாயின.
கலைமகள் இதழின் ஆசிரியரின் பரிந்துரையின் பேரில் அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார்.
பின்னர் பல முன்னணி இதழ்களில் சமூக நவீனங்களும் வரலாற்றுப் புதினங்களும் கதைகளும் எழுதிக் குவித்தார்.
இவரின்
1.பாவை விளக்கு
2. வாழ்வு எங்கே? (குலமகள் ராதை)
3. கயல்விழி ( மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் )
ஆகியவை திரைப்படங்களாக்கப்பட்டன.
அகிலன் எழுதிய சித்திரப்பாவை என்ற நாவல் 1975 ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ஞானபீடவிருதை வென்றது. இந்நாவல் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
இவர் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவலுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
எங்கே போகிறோம் என்ற தனித்துவமான சமூக அரசியல் நாவல் 1975 ஆம் ஆண்டில் இவருக்கு ராசா சர் அண்ணாமலை விருதைப் பெற்றுத் தந்தது.
கண்ணான கண்ணன் என்ற இவர் எழுதிய குழந்தை நூலுக்கு தமிழக அரசின் கல்வித்துறை சிறப்புப்பரிசு வழங்கி சிறப்பித்தது.
மலேசித் தமிழர்களின் தொடக்க கால வாழ்க்கையில் அவர்களுக்Gநர்ந்த துன்பங்களை விவரிக்கும் நவீனம் பால்மரக்காட்டினிலே இவரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கது.
அகிலன் 45 தலைப்புகளில் பல்வேறு படைப்புகளை உருவாக்கியுள்ளார்.
இவற்றில் பெரும்பாலானவை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன.
இவருடைய படைப்புகள் ஆங்கிலம், செருமனி, சீனம், மலாய் மற்றும் செக்கோசுலவேகிய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன.
தமிழ் நவீன படைப்புகளால் தனி இடம் பெற்ற அகிலன் தமது 66 ஆம் அகவையில் 31. 1. 1988 இல் இயற்கை எய்தினார்.
அவரின் படைப்புகள் மூலம் தமிழர் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.











