“எல்லாவற்றிலும் உள்ளே இருப்பதும் அதுவே
எல்லாவற்றிற்கும் வெளியே இருப்பதும் அதுவே”
அது உட்புறத்தில், வெளிப்புறத்தில் இருபுறத்திலும் உள்ளது.
ஆனால் முதலில் நீங்கள் உட்புறத்தில் தான் அதை அனுபவ பூர்வமாக
உணர வேண்டும். ஏனெனில் அதுதான் மிக அருகில் உள்ள இடம். மிக,
அருகில் உள்ள அந்தக் கதவு வழியாகத்தான் கடவுளின் கோவிலுக்குச்
செல்ல வேண்டும்.
அதுதான் உங்கள் ஆத்மா என்று அனுபவ பூர்வமாக
உணர்ந்து விட்டால், அதுதான் ஒவ்வொருவருடைய ஆத்மாவும்
என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
பின்னர் நீங்கள் அந்த ஆத்மாவை, மரத்தில், மலையில், விலங்குகளில், மக்களில் எங்குமே.
காண முடியும், உங்களுக்குள்ளேயே அதை ஒரு முறை உணர்ந்து.
விட்டால் அதையே எங்கெங்கும் உணர்வதில் தவறமாட்டீர்கள்.











