என் பிறந்த நாளன்று உனக்கு என்ன கொடுப்பது என்று சிந்தித்து கொண்டிருந்தேன்.
இது எனது பிறந்தநாள் என்பதால்,
இந்த நாளில்தான் நான் இந்த உடலில் அவதரித்தேன்.
இந்த நாளில் தான் பசுமையான மரங்களையும்,நீலவானத்தையும் நான் முதன் முதலில் பார்த்தேன்.
நான் முதன் முதல் கண் திறந்து பார்த்தபோது,
பார்த்தவை எல்லாம் கடவுளாகவே காட்சி அளித்தன.
அந்த சமயத்தில் கடவுள் என்ற வார்த்தை எனக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்,ஆனால் நான் பார்த்தவை எல்லாம் கடவுளாகவே இருந்தது.
இன்று உனக்கு என்ன கொடுப்பது?
புத்தர் சொன்னதை உனக்கு நினைவு கூறுகிறேன்,’
SABBA DANAM DHAMMA DANANA JNATI ‘
இதன் பொருள்
உண்மைக்கு ஈடானா பரிசு எதுவும் இல்லை,அதுனுள் எல்லாம் அடங்கும்.
எனது உண்மை ‘அன்பு ‘தான்
– ஓஷோ –










