சிந்தனையும், தியானமும். முழுக்க முழுக்க எதிரெதிர் திசைகளில் போகின்றன. ஒன்று வெளியுலகம் சார்ந்து போவது. மற்றது உன் மன ஆழத்தை நோக்கிச் செல்வது.
மற்றது என்ன என்பதனை விளங்கிக் கொள்ள வழி, சிந்தனை , சுயம் – ஆன்மா அது என்ன என்பதை அறிந்து கொள்ள வழி – தியானம். ஆனால், பொதுவாக சிந்தனை, ஆழ்ந்த யோசிப்பு, இதுதான் தியானம் எனக் கொள்ளப்பட்டது.
இது ஓர் ஆபத்தான மற்றும் பரவலாய் உள்ள தவறு. இந்த அடிப்படைத் தவறுதலுக்கு எதிராக நான் உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். ‘எதுவும் செய்யாத’ ஒரு நிலையிலிருப்பது தியானம்.
தியானம் என்பது எதையோ செய்வது அல்ல. ஒரு நிலையில் ஆணியிலறைந்தாற்போல நிலை பெற்று விடுவது அது. ஒருவனுடைய சுயம் எனும் ஆன்மாவில் போய் நிலைத்து நிற்பதாகும் அது.
நமது நடவடிக்கைகளால் நாம் புது உலகத்துடன் தொடர்பு வைத்துக் கொள்கிறோம். எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில், நாம் நம்முடைய சொந்தமான சுயத்துடன் தொடர்பேற்படுத்திக் கொள்கின்றோம்.
எதுவும் செய்யாத ஒரு நிலையில் நாம் யார் என்பதனை விளங்கிக் கொள்கின்றோம். மாறாக, அனைத்து விதமான விஷயங்களிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு உழன்று கொண்டிருக்கும்போது, நாம் நம் சுயத்தினைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தையே இழந்து விடுகின்றோம். நாம் இருக்கிறோம் என்பதையே கூட மறந்து போகின்றோம்.
நம்முடைய வேலைகளும் அவற்றுக்கான ஓட்டங்களும் மிக நெடியவை. நமது உடல் வேண்டுமானால் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். ஆனால், நம் சிந்தனையும் புத்தியும் ஓய்வெடுத்துக் கொள்வதே இல்லை. விழித்திருக்கும்போது நாம் சிந்திக்கிறோம்.
தூங்கும்போதோ கனவு காண்கின்றோம். இடைவிடாது இவ்வாறு நாம் செய்து கொண்டேயிருப்பதால், நாம் யார் என்பதை நாம் விமரிசையாய் மறந்து விடுகின்றோம்.
நம்முடைய தினசரி நடவடிக்கைகளுக்கு மத்தியிலேயே, நாம் யார் எனும் அறிதலை இழந்து விடுகின்றோம். விளங்கிக் கொள்ள முடியாத என்ன ஓர் ஆச்சரியமிது! ஆனால், இதுதான் நிஜம். நாம் தொலைந்து விட்டோம்.
ஒரு பெரிய திருவிழாக் கூட்டத்தில் அல்ல, நம் சொந்த சிந்தனை களாலும் நம்முடைய கனவுகளாலும் நம்முடைய தினசரி பணிகளாலும், நடவடிக்கைகளாலும், நாம் நமக்குள்ளேயே தொலைந்து நிற்கின்றோம்.
புத்திக்குள் இப்படித் திசை தெரியாது அல்லாடுவதிலிருந்தும், நாமே உருவாக்கிக் கொண்டுள்ள இந்த நெரிசலிலிருந்தும் நம்மை நாமே அகழ்ந்து ஆராய்ந்து விளங்கிக் கொள்ள,
தியானம் ஒன்றுதான் வழி. தியானம், ஒரு நிகழ்வாக இருக்க முடியாது. அதன் இயல்பு அப்படி. அது ஒரு பரபரப்பான வேலை கிடையாது. எவ்வித சிந்தனைகளாலும் சூழப்படாத, புத்தியை குறிப்பதாகும்
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்-
சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
+91-7305018180











