நகலெடுக்கிறார்கள் ஒரு சாதாரண பதில் – ஒரு ஆழமானபொருள்.
ஒரு பெண் தனது 6 வயது குழந்தையுடன் ரயில் பயணம் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் சத்தமின்றி புத்தகங்கள் படித்துக்கொண்டிருந்தார்கள்.
இது பெரும்பாலான சக பயணிகளுக்கு நம்ப முடியாததாக தோன்றியது. பின்னர் அவர்கள் அவளிடம் சென்று,
“அம்மா, இன்றைய உலகில் நேற்று பிறந்த குழந்தைகள், ஸ்மார்ட்போன்கள் மூலம் விளையாடுகிறார்கள், இந்த குழந்தை படித்துக் கொண்டு வருகிறது என கேட்டார்கள்.
மேலும் எப்படி ஒரு ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் வைத்துக் கொண்டு விளையாடாமல் இருக்கிறது இந்தக் குழந்தை?
இதை எப்படி உன்னால் செய்ய முடிந்தது. நீ எப்படி அவளைத் திருத்தினாய் ?
என மாறி மாறி ஆச்சர்யத்துடன் வினவினர்.
இந்தப் பெண் அவர்களுக்கு மிகவும் சாதாரணமாக பதிலளித்தார்.
“ஐயா, குழந்தைகள் நான் சொல்வதை என்றும் கேட்பதில்லை, அவர்கள் எங்களை மட்டுமே நகலெடுக்கிறார்கள்.”










