நல்வினைச் செய்யச் செய்ய தீவினை நீங்கி நலம் பெறலாம்.
மனிதனுக்கு அவசியம்
மனிதனிடம் சத்தியம், பொறுமை, தைரியம், கொடைகுணம், சோம்பலின்மை
ஆகிய ஐந்து குணங்கள் எப்போதும் இருக்க வேண்டும்.
மனிதனை அறியும் வழி
ஒருவனுடைய அறிவை-
அவன் செய்யும் செயல்களால் அறிய வேண்டும், பேச்சினால் அல்ல.
தற்பெருமை, பேராசை, கஞ்சத்தனம் ஆகிய மூன்றும்-
மனிதனைக் கீழ்நிலைக்குக் கொண்டு செல்லும்.
கருணை உடையவர்க்குத் துன்ப உலகு(நரகம்) இல்லையாம்.
வாழ்வு நீதி
பொய்ம்மை இல்லாதவர்களுக்குத் தேவர் உலகில் நிலையான இடம் உண்டு.
தீயசெயல்களைச் செய்பவனிடத்தில் வறுமை வந்து சேரும்.
மற்றவரைப் பற்றிப் புறங்கூறுபவரை உலகத்தார் பழிப்பர்.
உயர்ந்தவர்களுடன் நட்புக் கொண்டால் நீ உயர்ந்தவன் ஆவாய்
பொறாமை
பொறாமையைவிட கேடு விளைவிப்பது வேறொன்றும் இல்லை. பிறர் பொருளை விரும்பாதவனிடம் செல்வம் குவியும்.
தவம்
பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாதிருப்பதே தவம்.
நல்ல வழியில் வந்த செல்வம் தான் சந்ததிகட்குப் பயன்படும்
அன்பு
உபசரிப்பு இல்லாத உணவு மருந்துக்குச் சமம்.
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.
அன்பான வார்த்தைகளை விட உயர்ந்தது ஏதுமில்லை.
மறத்தல்
பிறர் நமக்குச் செய்தத் தீமையை மறத்தல் வேண்டும்.
பிறர் நமக்குச் செய்த நன்மையை மறத்தல் கூடாது
வாழ்க்கை தத்துவம்
ஆசைகள் குறையும் பொழுது அமைதி பெருகுகிறது.
செய்ய வேண்டியவை
சொல்லாலும் செயலாலும் பிறருக்கு உதவுவது சிறந்த வழிபாடாகும்.
நல்ல எண்ணங்கள் மனித உடலைப் புனிதமாக்கும்.
நல்ல எண்ணங்களே மனித வாழ்க்கையைத் தெய்வீகமாக்கும்.
இருக்காது
பொறாமை உள்ளவனிடம் புண்ணியம் இருக்காது !
சுகத்தை விரும்புவனிடம் கல்வி இருக்காது !
பேராசை உள்ளவனிடம் நாணம் இருக்காது !
சோம்பல் உள்ளவனிடம் செல்வம் இருக்காது !
உறுதி இல்லாதவனிடம் எதுவும் இருக்காது !
பிறவியும் வழிபாடும்
இம்மைப் பயனை விரும்பி இறைவனை வழிபடுபவர் அதமர் !
மறுமைப் பயனை விரும்பி இறைவனை வழிபடுபவர் மத்திமர் !
எதையும் விரும்பாமல் இறைவனை வழிபடுபவர் உத்தமர் !
மனமும் மனிதமும்
பிறர் கெட்டாலும் தான் மட்டும் வாழவேண்டும் என நினைப்பவன் அரக்கன் !
பிறரும் வாழவேண்டும் தானும் வாழவேண்டும் என நினைப்பவன் மனிதன் !
தான் கெட்டாலும் பிறர் வாழவேண்டும் என நினைப்பவன் தெய்வம் !
கொடுக்காது
புண்ணியம் துன்பத்தைக் கொடுக்காது !
பாவம் இன்பத்தைக் கொடுக்காது !
கருமிகள் இன்ப உலகை அடையவே முடியாது !
வராததும் பெறுவதும்
மருந்து உண்பதால் நோய் தீருமே தவிர மகிழ்ச்சி வந்துவிடாது.
படிப்பதால் அறிவு வளருமே தவிர ஒழுக்கம் வந்துவிடாது.
அறவழியில் வாழ்வதால் மகிழ்ச்சியைப் பெறலாம்.
சான்றோர் உறவால் ஒழுக்கத்தைப் பெறலாம்.
பக்தியும் அறிவும்
அறிவு பெருகப் பெருக ஆசை சுருங்க வேண்டும்.
இறை உணர்வு (பக்தி) இல்லாத வாழ்வு துடுப்பு இல்லாத படகிற்குச் சமம்.
தெய்வபக்தி
உண்மையான தெய்வபக்தி உள்ளவனிடம் தூய்மையான சிந்தனைகளே உண்டாகும்.
ஆணவம்
ஆணவம் தேவர்களையும் அசுரர்களாக மாற்றிவிடும்.
அடக்கம் மனிதர்களைத் தேவர்களாக்கும்.
நிந்திக்கின்றவர்களையும் வந்தியுங்கள்
காரணமில்லாமல் (பொறாமையினால்) ஒருவர் நம்மை நிந்தித்தால், நாம் செய்த பாவத்தில் ஒரு பகுதி அவரைச் சென்று சேரும். அத்துடன் அவர் செய்த புண்ணியத்தில் ஒரு பகுதி நம்மை வந்தடையும். எனவே நம்மை நிந்திக்கின்றவர் களையும் நாம் வந்திக்க (வணங்க) வேண்டும்.
வாழ்வின் நோக்கம்
வாழ்வின் நோக்கம் மனம் அடங்குவதே. மனம் அடங்கினால் சினம் அடங்கும். சினம் அடங்கினால் சிவம் விளங்கும். எனவே, கற்பதன் நோக்கம் கடவுளை அடைவதே ஆகும்.
நல்வினைச் செய்யச் செய்ய தீவினை நீங்கி நலம் பெறலாம்.
சிவாயநம
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்–
“சித்தர் பூமி” தினசரி ஆன்மீக செய்திகள் Play Store ல் Download செய்து படியுங்கள்..!
https://play.google.com/store/apps/details?id=com.siddharbhoomi.siddhar
உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!










