மதுரையில் ஸ்ரீ கணக்கன்பட்டி சற்குரு பழனி சுவாமிகள்
நீ செய்யும் எந்த ஒரு காரியத்திலும் பிடிப்பும், நம்பிக்கையும் இல்லாமல் செய்யாதே.
நம்பிக்கையின்றி மனம் ஒப்பாமல் நீ செய்யும் செயல் எதுவாயினும் அது நிறைவேறுவது கடினம்.
தொடர் தோல்விகளாலும், ஏமாற்றங்களாலும் நீ எதையும் நம்ப மறுக்கிறாய். ஆனால் அதற்காக நீ செய்யும் செயல்களையே நம்பாமல் செய்யதால் எப்படி.?
எனது பிள்ளைகளை என்றும் கவலைப்பட்டுக்கு கொண்டே இருக்க நான் விட்டு விடுவேனா ?
நான் இருக்கிறேன் நம்பிக்கையோடு இரு. கவலை படாதே உன்னை கை விடமாட்டேன்.
நீ சந்தேகமோ, கேள்வியோ இல்லாமல் நமக்கு எது சிறந்ததோ அது நிச்சயம் நம்மை வந்து சேரும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உலக அனுபவங்களை எடுத்துப் பார், இந்த எண்ணம் உள்ளவர்களே அவரவர் வாழ்க்கையில் வெற்றி பெற்று இருப்பார்கள்.
அதைத்தான் நான் உன்னையும் பின்பற்ற சொல்கிறேன்.
நீ உன்னுடைய துன்பமான காலங்களைக் கூட புன்னகையுடனும்,
தளராத நம்பிக்கையுடனும், எதிர்கொண்டு பார்…
உன்னுடைய தடைகள் அனைத்தும் வெற்றிப் படிகளாக மாறும்.
அதை பின்பற்றுவது சிறிது கடினமான ஒன்று தான். ஆனால் அதை முயன்று பார், உனது துயரங்கள் அனைத்தும் காணாமல் போகும்.
என்னை மீறி எதுவும் நடக்காது. உன் நிழலாக என்றும் உனக்காக நான் இருக்கிறேன்.
என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து செயல்படு
சகல செளபாக்கியங்களையும் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ்வாய்…
உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை இருப்பேன்!!!
நல்லதே நடக்கும்..!











