காற்றில் பறக்கும் நீர்க்குமிழாய் வாழ்க்கை, எப்போ வேணும்னாலும் உடையலாம்.
இன்னிக்கு பாத்தவங்கள நாளைஉசுரோட பாப்போமான்னு கூட தெரிலங்க இதுபோல
நிறைய நிறைய பாத்துட்டேன்.
நமக்கும் எப்போ வேணும்னாலும் என்னவும் நடக்கலாம்.
அடுத்தவங்கள பத்தி யோசிக்கிறத விடுங்க. மனம் திறந்து வாழுங்க, அட உங்க வீட்ல இருக்குறவங்க மனசுலயாவது இடம் பிடிங்க.
அன்பு காட்டுங்க ஆனா அதுக்கு தகுதியே இல்லாதவங்க கிட்ட அன்பு காட்டி நேரத்தை வீணாக்காதீங்க.
உங்கள நீங்களே அதிகமா நேசிக்க கத்துக்கோங்க அப்போதான் மத்தவங்கள உண்மையா நேசிக்கிற மனசு உங்ககிட்ட இருக்கும்.
அட நான் என்ன சொல்ல வரேன்னா. எப்படியும் வாழ பல வழி உண்டு – ஆனா
இப்படித்தான் வாழனும்னு சில வழிமுறைகள் இருக்குதுல்ல அத பின்பற்றி வாழுங்க.
நல்லா வாழ்ந்துட்டு நாலுபேர்கிட்ட பெயர் வாங்கிட்டு உலகத்த விட்டு போகணும்னு சொல்றேங்க புரிஞ்சுதா.
இவ்ளோ பேசுறானே வயசு 65 இருக்குமோன்னு நெனச்சுடாதீங்க.
நானும் கொஞ்சம் மாடர்ன் யங்ஸ்டர் தானுங்க. எனக்கு தெரிஞ்சத சொல்லிட்டேன்.











